ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியாகியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறப்போகும் 3 இந்திய பிளேயர்கள்…!

Indian Cricketers Retirement | உலகக்கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த உட்சபட்ச திருவிழாவான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19  ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இம்முறை இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடத்துகிறது. எனினும் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடவில்லை. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த முடிவை எடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பையை … Read more

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் இன்று நடைபெறுகின்ற 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related … Read more

நியாயம் வேண்டாமா? 250 கிலோ லக்கேஜ் எடுத்து சென்ற இந்திய வீரர்! விதியை மாற்றிய பிசிசிஐ!

சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது ஒரு வீரர் 250 கிலோவிற்கும் அதிகமாக பொருட்களை எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிசிசிஐ தனது விதிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி 150 கிலோவிற்கு மேல் கொண்டு செல்ல முடியாது என்று புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தியது. அதில் ஒரு பகுதியாக வெளிநாட்டுப் பயணங்களின் போது … Read more

வெளியானது ஐபிஎல் 2025 அட்டவணை! சிஎஸ்கே vs மும்பை போட்டி எப்போது?

IPL 2025 Schedule Live Updates: அனைவரும் அதிகம் எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. முதல் போட்டி மார்ச் 22ம் தேதியும், பைனல் மே 25ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது. ஐபிஎல் 2025 பிளேஆஃப்கள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த முறை இந்தியாவில் உள்ள 13 மைதானங்களில் மொத்தமாக 74 ஐபிஎல் போட்டிகள் … Read more

எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை அமைக்க முடியவில்லை – ஹர்மன்ப்ரீத் கவுர்

வதோதரா, 5 அணிகள் கலந்து கொண்டுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகி விருது நிகி பிரசாத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் … Read more

சாம்பியன்ஸ் டிராபிக்கு துபாய் சென்ற இந்திய அணி! முக்கிய வீரருக்கு காயம்!

வரும் பிப்ரவரி 19ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு சென்றுள்ளனர். 15 பேர் கொண்ட இந்திய அணியில் இன்னும் சிலர் மட்டும் ஓரிரு தினங்களில் செல்ல உள்ளனர். இந்நிலையில் கூடுதல் வீரராக அணியில் இடம் பெற்றுள்ள ஜெய்ஸ்வாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நாக்பூரில் உள்ள ஜம்தாவில் விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சியில் … Read more

மகளிர் பிரீமியர் லீக்; குஜராத் – உ.பி.வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்

வதோதரா, 5 அணிகள் கலந்து கொண்டுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரின் 3வது லீக் ஆட்டம் வதோதராவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்ட குஜராத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப … Read more

சிஎஸ்கே vs மும்பை! ஐபிஎல் 2025ன் முதல் அதிரடி போட்டி! எங்கு நடக்கிறது தெரியுமா?

தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்காக காத்து கொண்டுள்ளனர். ஆனால் அதைவிட அதிகமாக ஐபிஎல் போட்டிகளுக்காக காத்துக்கொண்டுள்ளனர். மார்ச் 22ம் தேதி ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாட உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அட்டவணை வெளியாகும் போதெல்லாம் அனைவரும் தேடும் ஒரு போட்டி என்றால் அது சென்னை vs மும்பை தான். El Clasico … Read more

ஊக்கமருந்து பிரச்சினை: 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் சின்னெருக்கு 3 மாதம் தடை

லண்டன், உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரராக வலம் வரும் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த மாதம் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனிலும் வெற்றி பெற்றிருந்தார். 23 வயதான சின்னெர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். அவரிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மற்றும் ரத்த மாதிரியை பரிசோதித்த போது அதில் குளோஸ்ட்போல் என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து லேசாக இருப்பது கண்டறியப்பட்டது. 8 நாளுக்கு பிறகு … Read more