கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விருத்திமான் சஹா

மும்பை, இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹா (வயது 40) அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கடந்த நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார். இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப்பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அணியில் நிலையான இடம்பிடித்தார். இருப்பினும் கேஎல் ராகுலின் வருகை மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இவர் கடைசியாக … Read more

விராட் கோலிக்கு ரஞ்சி கோப்பை எல்லாம் தேவையில்லை – ராயுடு ஆதரவு

மும்பை, இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்து வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து … Read more

ஐபிஎல் 2025: கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்! விளையாடப் போகும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார்?

IPL 2025, Chennai Super Kings Foreign Players: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வொயிட் பால் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.  சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும். அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். ஐபிஎல் 2025: அடங்க மறுக்கும் … Read more

"விராட் கோலி ரஞ்சி விளையாட தேவையில்லை" – முன்னாள் வீரர்!

இந்திய அணி சமீபமாக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பியது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் படுதோல்வி அடைந்தது என டெஸ்ட் தொடர்களில் மிக மோசமான விளையாடியது.  இதற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமசகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மூத்த வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் … Read more

"டெல்லி டீமில் இருக்க ரூ.1 லட்சம் கேட்டார்கள்".. விராட் கோலி பகிர்ந்த பகீர் செய்தி!

Virat Kohli: 2012ஆம் ஆண்டு பிறகு தற்போதுதான் விராட் கோலி மீண்டும் ரஞ்சி டிராபிக்கு திரும்பி உள்ளார். டெல்லி அணிக்காக களத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதனால் டெல்லி மைதானமே நிரம்பி வழிந்தது.  ஆனால் தனது ஆட்டத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார். மீதமுள்ள போட்டி இன்று தொடங்கிய நிலையில், ரயில்வே அணியை வீழ்த்தி டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.  விராட் … Read more

IND vs ENG: ஹர்திக் பாண்டியா செய்த புதிய சாதனை! இதுவரை யாரும் செய்ததில்லை!

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. பவர் பிளேயரில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார், இது அணியின் வெற்றிக்கு அதிகம் உதவியது. ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த போட்டியில் தனது திறமையை … Read more

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற செய்த பெரிய மோசடி? இங்கிலாந்து அணி அதிருப்தி

India vs England T20 controversy | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-1 என கைப்பற்றியது. இன்னும் ஒரு டி20 போட்டி எஞ்சியிருக்கிறது. இருப்பினும் புனேவில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு இங்கிலாந்து அணி அதிருப்திய தெரிவித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெறுவதற்காக மிகப்பெரிய மோசடியை செய்திருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்கால் டைகர்ஸ்

ரூர்கேலா, 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ், தமிழ்நாடு டிராகன்ஸ், சூர்மா ஆக்கி கிளப் மற்றும் ஐதராபாத் டூபான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் – தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற … Read more

டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த சாகிப் மக்மூத்

புனே, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 4-வது போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேமி சுமித் மற்றும் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாகீப் மக்மூத் ஆகியோர் இடம்பெற்றனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் அடித்தது. இதன் பின் … Read more

4-வது டி20: ஹர்திக், துபே அதிரடி.. இங்கிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

புனே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. 2-வது ஓவரை … Read more