நான் இந்தியாவுக்கு திரும்ப ஆடனும் – டெஸ்டில் முச்சதம் விளாசிய வீரரின் ஆசை

Karun Nair : இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கவுண்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக்காலமாக மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். அதனால் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  யார் இந்த கருண் நாயர்?  கேரளாவை பூர்வீகமாக கொண்டிருக்கும் கருண் நாயர் பிறந்து எல்லாம் ராஜஸ்தான். உள்நாட்டு … Read more

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்; சுனில் நரேன் ஸ்டைலில் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் – வீடியோ

கோவை, புச்சிபாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் ஆடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய சீனியர் வீரர்கள் பலரும் ஆடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் கோவையில் நேற்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை – டி.என்.சி.ஏ லெவன் அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் மும்பை அணியில் விளையாடும் சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசினார். அவர் சுனில் … Read more

ஐபிஎல் மெகா ஏலம்: எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம்? அஸ்வின் அடுக்கிய முக்கிய தகவல்கள்

IPL 2025 Mega Auction Cricket Latest News Updates: கிரிக்கெட் பார்ப்பது பலருக்கும் பிடிக்கும் என்றாலும், கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சிகள் நடப்பதும் பலரும் அதிகம் கவனிப்பார்கள். அந்த வகையில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தைதான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அதற்கு முன் எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்க முடியும் (IPL 2025 Retention Rules); அதில் எத்தனை இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், Uncapped வீரர்கள்; எத்தனை Retentions, எத்தனை RTM; … Read more

கொல்கத்தா வீரருக்காக டெஸ்டில் இருந்து சர்பராஸ் கானை கழட்டிவிடும் கம்பீர்?

Buchi Babu Match: இந்தியாவில் உள்ள உள்நாட்டு வீரர்களுக்காக நடத்தப்படுவது புச்சி பாபு தொடர் ஆகும். இந்த போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கான் தலைமையில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் TNCA XI அணிக்கு எதிராக விளையாடி வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பெற போராடி வரும் நிலையில், … Read more

ரோகித் சர்மாவே கேட்டுக் கொண்டதால் என்னால் மறுக்க முடியவில்லை – ரிங்கு சிங்

Rinku Singh : டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இருந்தாலும் அவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இதனால் கடும் வருத்தத்தில் இருந்த ரிங்கு சிங், அது குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்து பேசியுள்ளார். எனக்கு அடுத்தடுத்த டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதனால் இப்போது நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம் என ரோகித் சர்மா … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது

பாரீஸ், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை அரங்கேறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். உடல் குறைபாட்டுக்கு ஏற்ப விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. இதில் … Read more

டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த ஸ்பெயின் அணி

துபாய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) குரூப் சி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸை வென்றதன் மூலம் ஸ்பெயின் தொடர்ந்து 14 டி20ஐ வெற்றிகளை நிறைவு செய்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற … Read more

ஐபிஎல் 2025 வரை இந்திய அணி விளையாடும் போட்டிகள்! முழு அட்டவணை!

கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இருக்கும் இந்தியா, இந்த ஆண்டு பல அதிரடி தொடர்களில் விளையாட உள்ளது. சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி இந்தியன் பிரீமியர் லீக் 2025 வரை இடைவிடாமல் பல தொடர்களில் விளையாடி, ரசிகர்களுக்கு பல சுவாரஸ்ய நிகழ்வுகளை தர உள்ளனர். புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில், இந்திய அணி உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர்களில் பல சவால்களை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி அடுத்த ஆண்டு வரை … Read more

ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து

புதுடெல்லி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா … Read more