27 கோடிக்கு ஏலம் போனாலும் ரிஷப் பந்தின் ஐபிஎல் சம்பளம் இவ்வளவு தான்!

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதற்கு முன்பு இருந்த சாதனைகளை பந்த் முறியடித்து நம்பர் 1 இடத்தில் உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மாறி உள்ளார். ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி பந்தை 27 கோடிக்கு எடுத்தது. ரூ.20.75 கோடியில் பந்த் இருந்த போது டெல்லி கேபிட்டல்ஸ் ரைட் டு மேட்ச் பயன்படுத்தி பந்தை … Read more

40 செ.மீ.தான்… பும்ராவுக்கும் மற்ற பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் – பாக்.முன்னாள் வீரர்

பெர்த், இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் பும்ரா 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா, 3 … Read more

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு!

India Women vs Australia Women: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் டிசம்பரில் ஆஸ்திரேலியா பெண்கள் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி விக்கெட் கீப்பர்-பேட்டர் யாஸ்திகா பாட்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகி உள்ளார். … Read more

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் மினி ஏலம்; எப்போது தெரியுமா..?

புதுடெல்லி, ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 5 அணிகள் 71 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. மற்ற வீராங்கனைகள் ஏலத்துக்கு வருகிறார்கள். இந்த நிலையில் டபிள்யூ.பி.எல்.போட்டிக்கான வீராங்கனைகளின் மினி ஏலம் வருகிற 15-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும். தினத்தந்தி … Read more

மஹேந்திர சிங்க் தோனி சென்னை வரப்போகும் தேதி – சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட்நியூஸ்..!

ஐபிஎல் 2025 தொடருக்கான பிளேயர்கள் ஏலம் மிகப் பிரம்மாண்டமாக நிறைவடைந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பராக பிளேயர்களை இந்த ஏலத்தில் எடுத்திருக்கிறது. ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே ஆகியோரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிஎஸ்கே, ரவிச்சந்திரன் அஸ்வினையும் ஏலம் எடுத்திருக்கிறது. இதனால் அஸ்வின் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார். இதனால் அஸ்வின் – ஜடேஜா காம்போவான இந்திரன் சந்திரன் கூட்டணியை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் பார்க்க முடியும். அதேபோல் … Read more

புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதல்

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த பிரபாத் ஜெயசூர்யா

டர்பன், தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்களில் 191 ரன்னில் ஆல்-அவுட் … Read more

யார் வந்தாலும் ராகுல் தான் ஓப்பனர்… அப்போ ரோஹித் சர்மாவுக்கு எந்த இடம்? என்ன செய்யும் இந்திய அணி?

India National Cricket Team: தனக்கு குழந்தை பிறந்த காரணத்தினால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தவற விட்டார். அதற்கு பதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஜஸ்பிரித் பும்ரா இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி இந்திய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவும் உதவினார். முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், அடுத்து டெஸ்ட் போட்டி டிச. 6ஆம் தேதி அன்று … Read more

ஆஸ்திரேலியாவுக்குள் என்ட்ரி ஆகும் இந்த வீரர்… இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி – ஏன் தெரியுமா?

India vs Australia Test Series: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) தற்போது நடைபெற்ற வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்து விட்ட நிலையில், அனைவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர். பெர்த் நகரில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியா அடுத்து அடிலெய்ட் ஓவல் (Adelaide Oval) மைதானத்தில் தனது பதிலடியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.  அந்த வகையில், … Read more

சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி

லக்னோ, சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், மலேசியாவின் ஷோலே அய்டிலுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-12, 21-12 என்ற நேர்செட்டில் ஷோலே அய்டிலை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் லக்சயா சென், இஸ்ரேலின் டேனில் துபோவென்கோவை சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற … Read more