“ஆண்டுக்கு ரூ.90 கோடி… தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழலை நியாயமாக விசாரிப்பீர்!” – அன்புமணி

சென்னை: “தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் … Read more

ராமதாஸை சந்திக்க குருமூர்த்தியை அனுப்பியது பாஜகவா? நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?

Nainar Nagendran: ராமதாஸ் – அன்புமணி சமரச பேச்சுவாரத்தைக்கு குருமூர்த்தியை பாஜக அனுப்பியதா என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன பதிலை இங்கு பார்க்கலாம்.

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “தியாகத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய … Read more

மறுசீரமைப்பு பணிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் 1, 2-வது நடைமேடைகள் மூடல்

சென்னை: சென்னை: தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலை​யம் இருக்​கிறது. இந்த ரயில் நிலை​யத்தை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​தது. அதன்​படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடி​யில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கியது. முதலில் அடித்​தளம் அமைக்​கும் பணி முடிந்​தது. இதையடுத்​து, காந்தி இர்​வின் சாலை பக்​கத்​தில் எழும்​பூர் ரயில் நிலை​யத்தை ஒட்டி பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைக்​கும் பணி​ முழு​வீச்​சில் நடை​பெறுகிறது. … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu teacher transfer 2025 : அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் கருத்து கேட்புக்கு பின் எரிஉலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: பொது​மக்​கள் கருத்து கேட்​புக்கு பின் கு எரிஉலை திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று சென்னை மாநக​ராட்சி தெரிவித்துள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் திடக்​கழிவு மேலாண்​மைத் துறை, வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்புக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், “இந்​தி​யா​வில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் கழி​வு​களில் இருந்து மின்​சா​ரம் தயாரிக்​கும் ஆலைகள் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. டோக்​கியோ​வில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-ம் மேற்​பட்ட ஆலைகள் நிறு​வப்​பட்​டுள்​ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்​தின் அரு​கில் செயல்​படு​கிறது. கொடுங்​கையூரில் எரிஉலை அமைக்​கும் திட்ட … Read more

பட்டா வழங்க தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு – ப.சிதம்பரம் வைத்த கோரிக்கை

Patta Appliction : பட்டா வழங்க தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவுக்கு வரவேற்றிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். 

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

தாம்பரம் / திருவள்ளூர் / மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில … Read more

கிளாம்பாக்கம் நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் – நடந்தது என்ன?

கிளாம்பாக்கம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன் தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் … Read more

தமிழக வாழ்வுரிமை கட்சி பாமகவுடன் இணையாது: தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்

கடலூர்: நடிகர் விஜய், மாணவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக வேல்முருகனுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் வேல்முருகன், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி விருது நிகழ்வையும், விருது பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் … Read more