சமூக நலனுக்கான அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி டீக்காராமன் அறிவுரை

சென்னை: வழக்கறிஞர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிவுரை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் நாளை(ஜூன் 8) பணி ஓய்வு பெற இருக்கிறார். இதையொட்டி, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பேசியதாவது: சீனாவில் ஆண்டுகளுக்கு பெயர் சூட்டுவதுண்டு. அதேபோல் 1963-ம் ஆண்டுக்கு நீதிபதிகள் ஆண்டு என்று தான் பெயர் சூட்ட வேண்டும். … Read more

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்: பயணத்தின்போது ஆதாரை பரிசோதிக்க உத்தரவு

சென்னை: ரயிலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், ரயில் பயணத்தின்போது, பயணிகள் அடையாள அட்டைக்கு ஆதாரை காண்பித்தால் அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர், இதனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பயண தேதிக்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, ஐஆர்சிடிசி … Read more

காஞ்சிபுரம் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட 2 குட் நியூஸ் – மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

Kanchipuram, Tamil Nadu government : காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரயில்வே கேட்களை கடக்கும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்: ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை: ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சர்வதேச லெவல் கிராஸிங் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். ரயில் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது, சிலர் பாதுகாப்பு விதிமுறை பின்பற்றுவதில்லை. இதனால், ரயில்களில் மோதி உயிரிழக்கின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சர்வதேச … Read more

வருவாயை அதிகரிக்க மதுபானங்களை தொடர்ந்து புதுச்சேரியில் பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு

புதுச்​சேரி: புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின் மாத உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.1,000-மாகவும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி கூடுதல் செலவாகும். இதற்கு வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மதுபானங்களுக்கான கலால்வரியை அரசு ஏற்கெனவே உயர்த்தியது. … Read more

ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

தவெக – தேமுதிக கூட்டணியா? ஜன.9 மாநாட்டில் அறிவிப்பு வெளியாகும்: விஜய பிரபாகரன் தகவல்

கரூர்: தவெக-தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக வளர்ச்சியை நோக்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், … Read more

நீட் மறுதேர்வு நடத்த கோரிய மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மின்சார துண்டிப்பு காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், ‘அன்றைய தினம் சென்னையில் கனமழை … Read more

ராமதாஸ் – அன்புமணி இடையே விரைவில் சமாதானம்: ஜி.கே.மணி நம்பிக்கை

திண்டிவனம்: ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸை, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: “ராமதாஸும், அன்புமணியும் 45 நிமிடங்கள் பேசினர். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருவரும் சந்திக்கவில்லை என்று தவறான தகவலைப் … Read more

இன்று பக்ரீத் பண்டிகை: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவை … Read more