ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் 'டீ கப்'.. அரசு மருத்துவமனையில் பகீர் சம்பவம்.. அலறும் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமககள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்டுத்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் நோய்வாய்பட்டால் அவர்களுக்கு ஒரே புகலிடமாக இருப்பது அரசு மருத்துவமனைகள் தான். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களின் உயிரை காப்பாற்றும் ஏராளமான … Read more

முதியவருக்கு எய்ட்ஸ் பாதித்ததாக தவறான தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

நாமக்கல்: கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம்பர் மாதம் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு முன் ரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை … Read more

என்னை 'ஆடு' என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்.. ஆட்டுக்கும் எனக்கும் தொடர்பு அதிகம்.. அண்ணாமலை ஓபன் டாக்

சென்னை: தன்னை பார்த்து ‘ஆடு’ என விமர்சிப்பவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாணியில் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ஆட்டுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் நெகிழ்ச்சியாக பேசினார். தனியார் யூடியூப் சேனல் சார்பிலான நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவரை சிலர் ‘ஆடு’ என விமர்சிப்பது பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: எங்க அப்பா அம்மா ஆடு … Read more

மேட்டூர் | காவிரி ஆற்றை ஒட்டிய படித்துறையில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

மேட்டூர்: மேட்டூர் அணை காவிரி ஆற்றை ஒட்டியுள்ள படித்துறை பகுதியில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதி புனித நீராடுவதும், காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா, வரும் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 3-ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் … Read more

"சாத்தானின் பிள்ளைகள்".. பூதாகரமாகும் சீமானின் பேச்சு.. சீறிப்பாய்ந்த செல்வப்பெருந்தகை!

சென்னை: முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (31.07.2023) போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் எனப் பேசி இருக்கிறார். … Read more

கொல்லிமலை வல்வில் ஓரி விழா | அருவிகளில் குளிக்க தடை; சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

நாமக்கல்: கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்திரவிட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்குள்ள வியாபாரிகளை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும். இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் ஆகஸ்ட் மாதம் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். வில்வித்தையில் … Read more

கனடாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்… டெக்னாலஜி டூ ஆராய்ச்சி… ரெடியாகும் வேற லெவல் திட்டம்!

தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் திமுக அரசு நடைபெற்று வரும் நிலையில், மாநில வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டமிடல் ஆகியவற்றுக்காக பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. கடந்த மே மாதம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். இதன்மூலம் 6,100 கோடி ரூபாய் முதலீடுகளும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்தன. அண்ணாமலையும் பார்ப்போம், எவனையும் பார்ப்போம்? எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இவற்றை … Read more

பழநி கோயில் நுழைவு | உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திடுக: அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: பழநி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிடும். எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வழிபாட்டு தலங்களாக உள்ள கோயில்களை தங்களது மதவெறி அரசியலுக்கு பாஜக பயன்படுத்துவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. பழநி கோயிலில் தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி போராட்டங்களை நடத்தி வருகிறது. … Read more

டிடிவி தினகரனை 420 என்று கூறிய ஓபிஎஸ்.. இன்று காலில் விழுகிறார்.. ஜெயக்குமார் கடும் விமர்சனம்

சென்னை: “டிடிவி தினகரனை 420 என்றும், மாயமான் எனவும் கூறிய அதே ஓ.பன்னீர்செல்வம் தான் இன்றைக்கு அவர் காலில் விழுந்தும் அவருடன் இணைந்தும் போராட்டம் நடத்துகிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனியில் நடந்த போராட்டத்தில் அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் … Read more

வணிக நோக்கில் தண்ணீர் விற்பனை: தமிழக நீர்வளத் துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு  

மதுரை: பட்டா நிலங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் விற்ற வழக்கில் தமிழக நீர்வளத் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி ஆணையூர் அண்ணாமலையார் காலனியைச் சேர்ந்த ஏ.எஸ்.கருணாகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பலர் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். பட்டா நிலங்களில் பல நாட்களாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்து … Read more