வணிக நோக்கில் தண்ணீர் விற்பனை: தமிழக நீர்வளத் துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு  

மதுரை: பட்டா நிலங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் விற்ற வழக்கில் தமிழக நீர்வளத் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி ஆணையூர் அண்ணாமலையார் காலனியைச் சேர்ந்த ஏ.எஸ்.கருணாகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பலர் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். பட்டா நிலங்களில் பல நாட்களாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்து … Read more

மகளிர் உரிமைத் தொகை: வெளியான புதிய அறிவிப்பு… மு.க.ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்!

தமிழகத்தில் இனி பசியோடும், வறுமையோடும் ஒரு ஜீவன் கூட உறங்கக் கூடாது. சமூக நீதியும், சமத்துவமும் மக்களை ஏற்றம் காணச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக உடன்பிறப்புகள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். இந்த பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக இடம்பெறப் போவது “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம். இதன்மூலம் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். இந்தியாவிலே சிறந்த திட்டம் மகளிர் உரிமை திட்டம் தான் – அமைச்சர் … Read more

என்ஐஏ கைது செய்த மதுரை வழக்கறிஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ், தனக்கு … Read more

என்ன கொடுமை சார் இது… மீண்டும் கொளுத்தும் வெயில்… வானிலை அறிவிப்பால் விக்கித்து போன மக்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக பல இடங்கிளில் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் வெயில் வெளுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த சென்னை வானிலை மையம் ஆகஸ்ட் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் … Read more

ஓபிஎஸ், தினகரன் கூட்டாக ஆர்ப்பாட்டம்: கோடநாடு வழக்கு விசாரணையில் ‘ஆமை வேகம்’ என சாடல்

தேனி: “ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 30 மாதங்களாகிவிட்டன. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் நடக்கிறது” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோடநாடு கொலை வழக்கு விசாரணையை விரைந்து நடத்தக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், செவ்வாய்க்கிழமை தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் … Read more

'என் மகன்.. என் பேரன்'… திமுகவை வச்சு செய்த அண்ணாமலை!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கடந்த 28 ஆம் தேதி முதல் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் மக்களின் குறைகளை கேட்டறியும் அண்ணாமலை, மத்திய அரசின் 9 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணாமலைக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை சந்திக்கும் இடங்களில் திமுகவையும் வச்சு செய்து … Read more

ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடரும்… என்கவுண்டர் சம்பவம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால்

Guduvancherry Encounter Update: கூடுவாஞ்சேரி அருகே ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் – போலீஸ் காவல் மறுப்பு

பெரம்பலூர்: பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, 2 சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தைச் சேர்ந்த … Read more

மணிப்பூருக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு… ரூ.10 கோடி மதிப்பில் ஏற்பாடு… ஸ்டாலின் எழுதிய கடிதம்!

மணிப்பூர் கலவரம் தொடர்பான செய்திகள் தினசரி தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. கடந்த மாதம் வெளியான வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது. இது ஒன்றே வன்முறை களத்தின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. பலர் வீடுகளை இழந்து, தங்கள் உறவுகளை பறிகொடுத்து தவித்து கொண்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் நடவடிக்கை எப்போது மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம் இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் … Read more

தானே கிரேன் விபத்து | உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழர்: உடல்களை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலத்தைக் கட்டிவந்த VSL லிமிடெட் கட்டுமான நிறுவனத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனிடையே, எதிர்பாரா … Read more