கொடநாடு கொலை வழக்கு: தொலைபேசி உரையாடல்கள் ஆய்வு செய்ய வரும் குஜராத் தடய ஆய்வு குழு

கொடநாடு கொலை வழக்குகள் தொடர்பாக தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ய குஜராத் தடய ஆய்வுக்குழு ஜனவரி 25 ஆம் தேதிக்குப் பிறகு திருச்சி வர இருக்கிறது.    

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்; மக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் வழக்கம் போல் பேருந்துகளை இயக்கப்படுகின்றன, மக்கள் எவ்வித சிரமுமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளான 6 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று (ஜன.9) காலை … Read more

“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்” எனக் குறிப்பிட்டு அமைச்சர், அதிகாரிகள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு, ஜன.7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில், நேற்று முன்தினம் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் பரப்பப்படும் போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதேநேரம், செயற்கை நுண்ணறிவு ஏறத்தாழ 100 பேர் செய்யும் வேலையை செய்யும். இதனால் வேலை இழப்பும் நேரிடும். அதேபோல, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஒரு செய்தியை … Read more

இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Bus Strike Tamilnadu: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.  இருப்பினும் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகிறது.  

மின்னணு சாதனங்களில் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளால் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தகவல்

சென்னை: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ‘ மின்னணுவியல் – எதிர்காலம்’ தொடர்பான கருத்தரங்கில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் பேசியதாவது: ஜவுளி, உணவு பதப்படுத்துதல் துறைகளில் மூலப்பொருட்களை இடமாற்றம் செய்வது மிகவும் சிரமம் என்பதால், ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே தயாரித்து, ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், மின்னணு பொருட்களை எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்பதால், உலகளாவிய மின்னணு வர்த்தகச் சந்தைச்சூழலை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைகருத்தில் கொண்டு, மின்னணு உற்பத்தித் துறையில் … Read more

உச்ச நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும்: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

சென்னை: உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதல் வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பை நீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை கைதி உட்பட குற்றவாளிகள் அனைவரும் தண்டனை காலம் முடியும் முன்பு, குஜராத் மாநில … Read more

புதுச்சேரியில் இருந்து மாஹே, நாகர்கோவிலுக்கு அல்ட்ரா டீலக்ஸ் பிஆர்டிசி பேருந்துகள் தயார்!

புதுச்சேரி: ரூ.17 கோடியில் பிஆர்டிசிக்கு புதிய பேருந்து கள் பெங்களூருவில் தயாராகி வருகின்றன. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம்(பிஆர்டிசி) சார்பில் புதுச்சேரியில் இருந்து காரைக்கால், வேளாங்கண்ணி, குமுளி, மாஹே, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், காரைக்காலில் இருந்து சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதி களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர, புதுச்சேரி, காரைக்கால்,மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ளூர் பேருந்துகள் இயங்கப்பட்டு வருகின்றன. பிஆர்டிசியில் மொத்தம் 138 பேருந்துகள் … Read more

“பத்திரப் பதிவுக்கு லஞ்சம் பெறுவதாக கூறுவதில் உள்நோக்கம்” – அண்ணாமலைக்கு அமைச்சர் மூர்த்தி பதில்

சென்னை: “பதிவுத் துறையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தினமும் பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கையூட்டாகப் பெறப்படுகிறது என உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுவது முற்றிலும் ஆதாரமற்ற உள்நோக்கம் கொண்ட செயலாகும்” என்று வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத் துறையில் நாள்தோறும் நடைபெறும் பதிவுகளில் ஒவ்வொரு ஆவணத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை தனியே கையூட்டாகப் பெறப்படுகிறது என்றும், … Read more