முரசொலி நில விவகாரம்: புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் … Read more

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும்வரை சுங்கக் கட்டணத்தை ரத்து செய்க: ராமதாஸ்

சென்னை: மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் பணிகள் முடியும் வரை சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான பகுதி அண்மையில் பெய்த மழையில் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. சாலையின் மேற்பரப்பு முற்றிலுமாக சேதமடைந்து விட்ட நிலையில் பல இடங்களில் … Read more

கார்த்தி சிதம்பரத்தின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

பிரதமர் மோடிக்கு நிகரான பாப்புலாரிட்டி ராகுல்காந்திக்கு இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கம்: தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைந்த அளவி லேயே இயக்கப்பட்டன. இதனால், தனியார் மற்றும் மினி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை … Read more

தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு

தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஆயிரம் ரூபாய் தொகையை வழங்கியுள்ளது.  

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். iஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பொதுவாகவே, ஒவ்வோர் ஆண்டும் குடும்பத்தினருடனும், கிராமத்தினருடனும் இணைந்து பண்டிகைகளை கொண்டாடலாம் என்ற எண்ணத்தில், பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகளை முன்னிட்டு கூடுதலாக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து, நகர்ப்புறத்திலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு … Read more

போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் நீடிக்கிறது: 95% அரசுப் பேருந்துகள் இயங்கியதாக அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் நேற்று 95% அரசுப் பேருந்துகள் இயங்கியதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கின. நேற்று காலை முதலே சென்னையின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் … Read more

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல். தனது முடிவை முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ல் திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக அவர் நியமிக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற … Read more

பழனி கோவிலில் இனி இந்த விஷயங்கள் இருக்காது! புதிய விதிகள்!

இனி வரும் காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.