நெல்லை – சென்னை ‘வந்தே பாரத்’ ரயில்: கோவில்பட்டியில் நிற்க வைகோ வலியுறுத்தல்

கோவில்பட்டி: நெல்லை – சென்னைக்கு இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய ரயில்வே மந்திரியிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார். நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ என்ற துரித ரயில் நாளை (செப்.,24) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று சென்னையை சென்றடைகிறது. இந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ஆவணம் செய்யுமாறு மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி … Read more

தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை: ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் கார்வேந்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள பள்ளர் , பண்ணாடி, வாதிரியான், காலடி, குடும்பன், கடையன் மற்றும் தேவேந்திரகுலத்தான் ஆகிய ஜாதியினரை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா … Read more

“உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றம் தேவையில்லை என மக்கள் நினைப்பர்” – ஐகோர்ட்

மதுரை: “நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றம் தேவையில்லை என மக்கள் நினைக்க தொடங்குவார்கள்” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமி, கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தோம். முதலில் பகுதி நேர பணியாளர்களாகவும் பின்னர் முழு நேர பணியாளர்களாகவும் பணிபுரிந்தோம். 2018-ல் முழு நேர பணியாளர்களுக்கு மட்டுமே ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இதனால் எங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் … Read more

பாலாறு வனப் பகுதியில் மண்சரிவு: மேட்டூர் – மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மேட்டூர்: தமிழக – கர்நாடக எல்லையான பாலாறு வனச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக மைசூருக்கு செல்ல வேண்டும். இதில் காரைக்காடு முதல் பாலாறு சோதனைச்சாவடி வரை சுமார் 5 கீ.மீ சாலை ஈரோடு வனக்கோட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு ஒட்டி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை சேலம் மாவட்டம் எடப்பாடி கோட்டம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று … Read more

‘ஊதிய நிலுவை வழங்க பணம் இல்லையெனில் பேருந்துகளை விற்றுத் தரவேண்டியது தானே!’ – உயர் நீதிமன்றம் ஆவேசம்

மதுரை: ”அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க போதுமான நிதி இல்லை என்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டியது தானே” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 1.04.2014 முதல் 31.01.2017 வரை வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவை தொகை இதுவரை … Read more

தமிழகத்தில் டெங்கு பாதித்த 343 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “ஆண்டுதோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில் இதுவரை 4,227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 நபர்கள் இறந்துள்ளனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை … Read more

கோவையில் மீண்டும் போட்டியிடுவேன்: மநீம தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டம்

கோவை: ‘‘எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்’’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது: “சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக சிறுபிள்ளையை … Read more

“பெரியார் – மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: “தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், “தந்தை பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்” என்று பேசிவிட்டேன். “அழைத்துக் கொண்டு போனார்” என்பதற்கும் “கூட்டிக் கொண்டு போனார்” என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன் என்று பெரியார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்.17 அன்று வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா மற்றும் பவள … Read more

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது: மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: மகளிருக்கான இலவச விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது என்று மாநிலத் திட்டக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தாக்கம் குறித்தும், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.22) தலைமைச் … Read more