”திருக்குறள், திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை” – திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை என்றும் வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என ஆளுநரின் சர்ச்சைப் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மும்மொழிக் கொள்கைக்கான தேவை என்னவென்று கூறினால், அதை நாம் புரிந்து கொள்ள முடியும். தற்போது மும்மொழிக் கொள்கைக்கான தேவை எதுவுமே கிடையாது. நம்முடைய … Read more

மாட்டுப் பொங்கல் தினத்தன்று விவசாயிக்கு அதிர்ச்சி! சிறுத்தை செய்த சம்பவம்..

Tamil Nadu News: மாட்டுப் பொங்கல் கொண்டாடி வரும் வேளையில், சிறுத்தையால் நேர்ந்த சம்பவத்தால் விவசாயிக்கு ஏற்பட்ட வேதனை. பொதுமக்கள் அச்சம். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர்.

நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று 16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகம், … Read more

“தமிழகத்தில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” – ஆளுநர் எக்ஸ் தள பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை

சென்னை: “தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்து அவரை சனாதனத் துறவி என்று தமிழக ஆளுநர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் முதல்வர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற … Read more

“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி திருவள்ளுவர்” – ஆளுநர் ரவி ட்வீட்டால் சர்ச்சை

சென்னை: காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தைப் பகிர்ந்து, அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க … Read more

காவி உடையில் திருவள்ளூர்… ஆளுநருக்கு முதல்வர் கொடுத்த அதிரடி பதிலடி – முழு பின்னணி

CM Stalin vs Governor RN Ravi: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டால் விழாக்கோலம் பூண்ட மதுரை: அவனியாபுரத்தில் களம்காணும் 1,000 காளைகள்

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக திரண்டுள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பார்வையாளர்களால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல்களில் மொத்தம் 6 ஆயிரம் காளைகளை அவிழ்த்துவிட மாவட்ட நிர்வாகத்தால் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. நாளை(ஜன.16) பாலமேடு, நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு … Read more

10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர்: தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி முதல் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தொலைதூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 12, 13 தேதிகளில் 7,670 அரசு பேருந்துகளில் 4 லட்சத்து44,860 பேர் பயணித்துள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, தாமதமாகவே சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்க … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம் | 1000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

பாலமேடு: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பாலமேடு கிராமத்தில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சுமார் 1,000 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் நேற்று பொங்கல் … Read more

காவல், தீயணைப்பு, சிறை துறைகளில் 3,184 பேருக்கு சிறப்பு பதக்கம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காவல், தீயணைப்பு – மீட்பு பணிகள், சிறைகள் – சீர்திருத்த பணி ஆகிய துறைகளில் பணியாற்றுவோர் தங்கள் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் நாளில், தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு காவல் துறையில் ஆண், பெண் காவலர்கள், காவலர் நிலை-1, தலைமை காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பேருக்கு ‘தமிழக … Read more