யூனிடெக்கின் ரூ.125 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பரிவர்த்தனையில் அமலாக்கத் துறை நடவடிக்கை
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் யூனிடெக் நிறுவனத்தின் ரூ.125.06 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் குழுமம், அதன் விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அந்நிறுவனத்தில் வீடுகள் வாங்கியவர்களிடம் பண மோசடி செய்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கெனவே, யூனிடெக் குழுமம் மற்றும் அதன் தொடர்புடைய … Read more