எம்ஜிஆருக்கு பதிலாக அரவிந்த்சாமி – அதிமுக பேனர் சலசலப்புக்குப் பின்னால்..!

திருப்பத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூர் அருகே வைக்கப்பட்ட பேனரில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு பதிலாக அவரது கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை அதிமுகவினர் வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா இன்று (ஜன.17) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மிட்டாளம் … Read more

ஜல்லிக்கட்டு பாரம்பரியம் | நிர்மலா சீதாராமன் திரித்து கூறுவதாக சு.வெங்கடேசன் காட்டம்

சென்னை: “ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார்” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தைத் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி … Read more

“உயிரிழப்பு இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவதே குறிக்கோள்” – அலங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி தகவல்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை உயிரிழப்பின்றி நடத்துவதே குறிக்கோள் என தமிழக விளையாட்டு துறை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கிவைத்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுமார் 5 மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு பாதுகாப்புடன் சிறப்பாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. நிறைய பரிசுகள் அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு … Read more

கிளாம்பாக்கத்திற்கு வரவே வேண்டாம்… மின்சார ரயிலில் சிட்டிக்குள் வர இந்த இடத்தில் இறங்கவும்!

Kilambakkam Nearest Railway Station: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர், கிளாம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் நகருக்குள் செல்லலாம் என நினைத்திருந்தால், அதற்கு என்ன செய்யலாம் என்பதை இதில் காணலாம்.

சிறாவயல் மஞ்சுவிரட்டு | மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: உலகப் புகழ் பெற்ற சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். முன்னதாக, மஞ்சுவிரட்டுக்காக திடலைச் சுத்தம் செய்தல், தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடத்தைத் தயார் செய்தல் போன்ற … Read more

Special Trains: தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… சென்னை வர சிறப்பு ரயில் – விவரம் உள்ளே!

Pongal Special Trains: தென்மாவட்டத்தில் இருந்து இன்று சென்னை திரும்ப திட்டமிட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  

தமிழக மீனவர்கள் 28 பேர் கைது; இரு தரப்பு பேச்சு நடத்தி அரசு தீர்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 28 பேரை 24 மணி நேரத்தில் சிங்களக்கடற்படையினர் கைது … Read more

நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது – ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!

தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என ஆர்.என்.ரவி கூறி உள்ளார்.  

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 73 பேர் காயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 678 காளைகளும், 358 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில், 2 எஸ்ஐ-க்கள் உட்பட 73 பேர் காயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நற்கடல் குடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 678 காளைகளும், 358 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். கோட்டாட்சியர் பார்த்திபன் … Read more

“தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்” – தம்பிதுரை எம்.பி. வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: தமிழ் மொழியை தேசத்தின் மத்திய ஆட்சி மொழியாக மாற்றினால் தான் மாநிலத்திற்கான உரிய பலன்கள் கிடைக்கும் என பர்கூரில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல், கபாடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், … Read more