ரவுடி கருக்கா வினோத் மீது நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது நீதிமன்றத்தில் என்ஐஏ 680 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த ஆண்டு அக்.25-ம் தேதி ரவுடி கருக்கா வினோத், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கருக்கா வினோத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மத்திய … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்றார்

ஸ்ரீரங்கம்: பிரசித்தி பெற்றதும், 108 வைணவத்தலங்களுள் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை தமிழகம் வந்த பிரதமர், சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். … Read more

மதுரை கலைஞர் நூலகத்தில் 4.50 லட்சம் புத்தகங்களை பராமரிக்க 30 நூலகர்கள் போதுமா?

மதுரை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரையில் கடந்த ஆண்டு ஜூலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.215 கோடியில் 3.56 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்துக்கு தினமும் 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். 4.50 லட்சம்புத்தகங்கள் உள்ளன. ஆனால், இந்த … Read more

திமுக எம்எல்ஏ உறவினர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: பல்லாவரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பட்டியலின மாணவி கொடுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாடுகள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட ஆண்டோ மற்றும் மெர்லின் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ வீடு … Read more

“கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செயல்படும்” – உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: “கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இவ்வாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மேலும் பேசுகையில், “தற்போதைய நிலையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் புதிய … Read more

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை: வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத் துறை செயலாளராக மாற்றம் நில நிர்வாகத் துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் மீன்வளத் துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை … Read more

“நில ஒருங்கிணைப்பு சட்டம் மூலம் விவசாயிகளை அழிக்க நினைக்கிறது திமுக அரசு” – பி.ஆர்.பாண்டியன்

மதுரை: “திமுக அரசு தமிழகத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை அழிக்க நினைக்கிறது. இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஜன.29-ல் மாநிலம் தழுவிய அளவில் திருச்சியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். ஐக்கிய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு கிளையின் தென்மண்டல கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. மதுரை மண்டல செயலாளர் உறங்காபுலி தலைமை வகித்தார். எம்பி.ராமன், மதுரைவீரன், சங்க வழக்கறிஞர் அணி தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தேனி … Read more

இந்த முறை உங்களுக்கு சீட் கிடைக்குமா? குஷ்பூ கொடுத்த ரியாக்ஷன்

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்த குஷ்பூ, நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.   

“ஊடக சந்திப்பில் மீண்டும் அநாகரிகம்… அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!” – மார்க்சிஸ்ட்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரிகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும், அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் செய்தித் தொலைக்காட்சி நெறியாளரை நோக்கி முற்றிலும் அநாகரிகமாக, தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதற்கான அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது? அவர் சார்ந்துள்ள பாஜக, மத்திய அரசாக உள்ளது என்பது … Read more

சென்னை பயணிகளுக்கு நற்செய்தி… இனி கோயம்பேடு வரை ஆம்னி பஸ்கள் வரும் – முக்கிய அறிவிப்பு!

Kilambakkam Bus Stand: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.