“ஆளுநர் ஆர்.என்.ரவி அலறலுக்கு அரசியலே காரணம்” – முதல்வர் ஸ்டாலின் @ ஆன்மிக விவகாரம்

சென்னை: “ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து, அதனை உண்மை போல ஆக்கும் பணியை பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழகத்தில் உள்ள பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது. இவர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சென்னை மாம்பலம் கோயில் … Read more

எனக்கு கட்சி எல்லாம் தெரியாது எனக்கு தெரிந்த ஒரே கட்சி எங்க தங்கச்சி – நடிகர் பாலா

பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட எனக்கு தெரியாது நான் எங்க இருந்து பொலிட்டிக்கல் வர போறேன் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் கேபிஓய் நடிகர் பாலா.  

புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு திடீரென இடிந்து விழுந்து தரைமட்டம்

புதுச்சேரி: வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக, புதுச்சேரியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த 3 மாடி வீடு சாய்ந்து முழுவதுமாக இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை. புதுச்சேரியில் நகரத்தின் மேட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் வெளியேறும் வழியாக உப்பனாறு வாய்க்கால் உள்ளது. பல ஆண்டுகளாக இதை சீரமைக்காமல் உள்ளனர். இதற்கு மேலே காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கு … Read more

ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து 14 லட்சம் அபேஸ்! சினிமா பாணியில் கொள்ளை..

தருமபுரி நகரில் உள்ள ஒரு ஜவுளி கடையின் மேற்கூரை உடைத்து 14 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பாணியில் திருடி சென்ற 2 பேர் கைது. 

பூலித்தேவன் நினைவு தபால் தலை | மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற முறையில் பூலித்தேவன் நினைவு தபால் தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த நேதாஜி இளைஞர் சங்க தலைவர் முத்து தாக்கல் செய்த மனுவில், “18-ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டும்சேவல் பகுதியை ஆண்ட மன்னர் பூலித்தேவன். … Read more

ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு!

ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. 

அறக்கட்டளை நிர்வாகிக்கு முன்ஜாமீன் மறுப்பு: தற்காலிக ஆசிரியர் நியமன மோசடி புகாரை பள்ளிக் கல்வி இயக்குநர் விசாரிக்க உத்தரவு 

மதுரை: தென் மாவட்டங்களில் நடைபெற்ற தற்காலிக ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் அறக்கட்டளை நிர்வாகியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மோசடி குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாலகுமரேசன். இவர் ஆதவா அறக்கட்டளை நடத்தி வந்தார். அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசும், அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறி, பலரிடம் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் … Read more

இது ஒரு மந்திரிக்கு அழகா? இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா.. -அமைச்சர் துரைமுருகன்

TN Minister Duraimurugan: கோவில்களில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தி. மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல. பொன்னை ஆற்றில்  குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்று குற்றச்சாட்டுப் பதிவு இல்லை – புதிய மனு தாக்கல்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் … Read more

'அயோத்திக்கு போகாமல்… நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' – புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!

Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.