மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் நலனைக் காத்திட, போதிய சந்தை தேவையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சுமார் 1.46 லட்சம் ஹெக்டரில் … Read more

பாமக நிறுவனர் ராமதாஸ் திருமண நாள் நிகழ்வு: அன்புமணி – சவுமியா புறக்கணிப்பு

விழுப்புரம்: தைலாபுரத்தில் இன்று (ஜுன் 24-ம் தேதி) மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சியை பாமக தலைவர் அன்புமணி – சவுமியா குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கி வரும் … Read more

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகள் சொல்வது என்ன?

மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் உரிய முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரியும், … Read more

“மருத்துவத் துறை சாதனைகளை பழனிசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேலூர்: “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையில் அறிக்கை விட்டுள்ளார்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.198 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இன்று … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உட்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். … Read more

சமஸ்கிருத மொழிக்கு ஏன் இவ்வளவு நிதி…? மத்திய அரசுக்கு சீமான் கிடுக்குபிடி!

NTK Seeman Latest News Updates: யாருமே பேசாத மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றும் கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

“பெரியார், அண்ணாவை பழித்தவர்கள் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வரக்கூடிய ஜூலை 1-ம் தேதி முதல்வர் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முறைப்படி … Read more

'பட்டியலின மக்கள் நலனில் பாகுபாடு' திமுக மீது குற்றச்சாட்டு – ஆதவ் அர்ஜூனா சொல்வது என்ன?

Aadhav Arjuna: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பட்டியலின மக்கள் நலினில் தொடர்ந்து பாகுபாடு காட்டிவருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜூனா கடுமையாக விமர்சித்துள்ளார். 

கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: “தமிழகத்தில் கோயில் விழாக்களில் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக்கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், அனைத்து சமூக … Read more

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் நடை மேம்பாலம்: ரூ.20 கோடியில் பணிகள் தீவிரம்

காட்டாங்கொளத்தூர் தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை – திருச்சி சாலை, தற்போது நான்குவழி சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனிடையே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழி சாலை 8 வழி சாலையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்ட நிலையில், சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருச்சி வரை 8 வழி சாலையாக மாற்றும் … Read more