2026-ல் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம்: செந்தில் பாலாஜி நம்பிக்கை

கரூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார். கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வரவேற்றுப் பேசியது: 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு முதல்வரின் வருகை கட்டியம் கூறும். 2026 தேர்தல் வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம். வரும் தேர்தலில் நாம் தான் வெற்றிபெறுவோம். … Read more

சசிகலா ஓபிஎஸ், தினகரனை எதிர்கொள்ள முடியாமல் இபிஎஸ் திணறுகிறார் – கிருஷ்ணசாமி!

சசிகலா ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர்களை சந்திக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி திணறுகிறார் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.  

அதிமுக உள்கட்சி விவகாரங்களால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது: ஹெச்.ராஜா

திருச்சி: அதிமுக உள்கட்சி விவகாரங்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: செப்.22-ம் தேதி ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் அமலுக்கு வருகிறது. இது வரிவிகித மாற்றம் மட்டுமல்ல, பொருளாதார மாற்றத்தை கொண்டு வரும் திட்டம். இதனால், 2027-ல் பொருளாதாரத்தில் உலகிலேயே 3-வது இடத்துக்கு இந்தியா வரும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்தபோது அவர் … Read more

சத்குரு முன்னிலையில் வரும் 21ம் தேதி ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்

ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. 

தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் பழனிசாமி திணறுகிறார்: கிருஷ்ணசாமி

திண்டுக்கல்: தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம், என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பலரும் இந்திய சுதந்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் தவறில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் மறைந்த தலைவர்களின் பெயரை பயன்படுத்தி அரசியல் … Read more

அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? தவெக விஜய்க்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

தலைவராகிய நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பினர்.   

“தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வரப்பட்டது. 2012-ஆம் ஆண்டு அச் சட்டத்தில், ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர் … Read more

தமிழ்நாட்டில் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு இன்று தொடங்கியது – முழு விவரம்

Indian Army Recruitment Tamil Nadu : தமிழ்நாட்டில் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு இன்று தொடங்கியது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு தர்ணா: திமுக, காங். எம்எல்ஏகள் வெளியேற்றம்

புதுச்சேரி: மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்தக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். புதுவை சட்டப்பேரவை இன்று (வியாழக்கிழமை) கூடியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக பேரவைத்தலைவர் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்து,பேரவை முன்பு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார். அப்போது சுயேட்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் … Read more

‘நான் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக முதல்வர் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது’ – இபிஎஸ்

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது முகத்தை துடைத்ததை, மூடிக்கொண்டு சென்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 153 … Read more