‘ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்’ – தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை

விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “எங்களது கூட்டமைப்பு சார்பில் மிகப் பெரிய போரட்ட களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நோக்கி நாங்கள் … Read more

உருவாகும் மோந்தா புயல்.. சென்னைக்கு ஆபத்தா? வெதர்மேன் கொடுத்த வார்னிங்

Cyclone Montha Alert: வங்கக் கடலில் மோந்தா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தலைநகர் சென்னையில் கனமழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.   

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரம் விடுதியில் விஜய் சந்திக்க ஏற்பாடு!

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை தனித்தனியாக சந்திக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முன்னதாக, கரூரில் உள்ள மண்டபத்தில், பாதிக்கப்பட்டோரை வரவழைத்து அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக, கரூரில் மண்டபங்கள் பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் சந்திப்புக்கு கரூரில் மண்டபங்கள் கிடைக்க சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, பாதிக்கப்பட்டோரை … Read more

தேர்வே இல்ல.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. IRCTC-ல் சூப்பரான வேலை!

IRCTC Recruitment 2025 : ரயில்வே துறையின் கீழ் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு உள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ரயில் முன்பதிவு, கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்டவை செய்து வருகிறது.  ரயில்வே ஒரு அங்கமாக இருக்கும் ஐஆர்சிடிசி தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம். 

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்தில் பெய்த தொடர் மழையால் 51.26 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை கணக்கிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாளையங்கோட்டை வெள்ளக்கோயில் உட்பட பல்வேறு இடங்களில் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. அவ்வாறு தண்ணீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்களில் நெல் மணிகள் முளைவிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, … Read more

புதிய தொழில் தொடங்கணுமா? EV சார்ஜிங் நிலையம் அமைத்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்!

மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க இடத்தின் மதிப்பு, சார்ஜர்களின் எண்ணிக்கை மற்றும் வகையை பொறுத்து, சில லட்சங்கள் முதல் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படலாம்.

காவிரி உபரிநீர் மூலம் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு

மேட்டூர்: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் குறித்து மேட்டூரை அடுத்த சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி பரிசல்துறை ஆகிய பகுதிகளில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காவிரி ஆற்றின் உபரி நீரை மேட்டூர் அணையின் வலது கரை நீர் தேக்கப்பகுதியிலிருந்து, கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள … Read more

டெல்டா பாதிப்பு, கனிமக் கொள்ளை, சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி ராமதாஸ் பேட்டி

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் சுமார் 2.5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவமழை முன்பே மழைநீர் வெளியேறும் நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும், இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.  

கரூர் வழக்கில் நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாமீன் மனு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் … Read more

50க்கும் மேற்பட்ட மயில்கள் பலி, விவசாயி கைது: வனத்துறையினர் விசாரணை

திருவேங்கடம் அருகே பறவைகளை கட்டுப்படுத்த எலி மருந்து வைத்த நிலையில் அதை தேசிய பறவையான மயில்கள் உட்கொண்டதால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் பலி. விவசாயி ஜான்சன் கைது. வனத்துறையினர் விசாரணை.