புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புராதன சின்னங்கள், கோயில்கள், கட்டிடங்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் புராதன சின்ன ஆணையத்தை அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களில் ஆணையத்தை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, கோயிலில் சுற்றுச்சுவருக்கு மிக அருகில், கியூ காம்ப்ளக்ஸும், பக்தர்கள் … Read more

தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடியில் நிதியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும் என்று கோவையில் நேற்று தொடங்கிய உலகளாவிய ‘ஸ்டார்ட்அப்’ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழகம் ஈர்த்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 6 மடங்கு … Read more

‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர் 2025: நடிகர் சிவகுமார் வெளியிட்டார் 

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ 2025 தீபாவளி மலரை, நடிகர் சிவகுமார் சென்னையில் நேற்று வெளியிட்டார். ‘இந்து தமிழ் திசை’யின் ‘தீபாவளி மலர்’ 2013-ம் ஆண்டு முதல் வெளியாகிவருகிறது. 2025 தீபாவளி மலர் 276 பக்கங்களுடன் அனைத்து வயதினரும் படிக்கும் வகையிலான பல்வேறு சிறப்பு படைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மலரில் இடம் பெற்றுள்ள தமிழ் சினிமாவின் கானக்குயில் பி.சுசீலாவின் ஈடற்ற இசைப் பங்களிப்பு, நூற்றாண்டு கண்ட திரை ஆளுமைகளான ஆர்.எஸ்.மனோகர், எம்.பி.சீனிவாசன், கலை கங்காஆகியோரின் தனித்தன்மைகள், சிறப்புகள் குறித்து … Read more

அதிமுகவின் 54-ம் ஆண்டு தொடக்கவிழா: அக்.17, 18-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள்

சென்னை: அ​தி​முக​ பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மாபெரும் மக்​கள் பேரியக்​க​மாம் அதி​முக, அக்​.17-ம் தேதி 54-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைப்​பதை முன்​னிட்​டு, அக்​.17, 18-ம் தேதி​களில், கட்சி அமைப்​புரீ​தி​யாக செயல்​பட்டு வரும் 82 மாவட்​டங்​களி​லும்; புதுச்​சேரி, ஆந்​திரா உள்​ளிட்ட பிற மாநிலங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெற உள்​ளன. அதற்​கான இடங்​கள், அவற்​றில் கலந்​து​கொண்டு சிறப்​புரை​யாற்​று​வோர் விபரங்​கள் அடங்​கிய பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி17-ம் தேதி சேலத்​தில் நான் உரை​யாற்​றுகிறேன். மாவட்​டச் செய​லா​ளர்​கள், தங்​கள் மாவட்​டத்​தில் நடை​பெற உள்ள … Read more

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது

கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டு நரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் … Read more

“பாதுகாப்பான ஊரான கரூருக்கு விஜய் தைரியமாக வரலாம்!” – அண்ணாமலை

சென்னை: “டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம். கரூர் பாதுகாப்பான ஊர். விஜய் தைரியமாக வரலாம்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் எல்லோருக்கும் எந்த இடத்துக்கு செல்வதற்கும் உரிமை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் இல்லை. இந்தியாவில் இருக்கக் கூடிய சில … Read more

“அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி முறைகேடு மீது நடவடிக்கை” – நாமக்கல்லில் பழனிசாமி உறுதி

நாமக்கல்: “அதிமுக ஆட்சி அமைந்துவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: ”திமுக ஆட்சியில் குடிக்கும் நீரில் மலம் கலக்கப்படுகிறது. இந்த ஆட்சி வந்தபோது வேங்கைவயல் சம்பவத்தில் குற்றத்தில் … Read more

உஷார் மக்களே.. கோவை டூ வேலூர் வரை.. இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 10) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கில் ஒபிஎஸ் நேரில் ஆஜராகி 38 ஆவணங்கள் சமர்ப்பிப்பு

சென்னை: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி 38 ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 … Read more

இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி! கூட்டணியில் விஜய்யா? – அண்ணாமலை சொன்ன பதில் என்ன?

Annamalai Latest News Updates: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி அசைக்கப்பட்டது குறித்தும், பிழையார்சுழி என இபிஎஸ் பேசியது குறித்தும் அண்ணாமலை பேசியதை இங்கு காணலாம்.