ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு மாநாடு தொடக்கம்: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை: ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதிகட்டமைப்பு பணிக் குழுவின் இரண்டு நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தற்போது ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. இதையொட்டி, கல்வி, நிதி, எரிசக்தி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, ஜி-20நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் கடந்த ஜனவரி 31, … Read more

நில அளவர் தேர்வு: ஒரே மையத்திலிருந்து 700க்கும் அதிகமானோர் தேர்ச்சிபெற்றதால் அதிர்ச்சி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நில அளவை துறையில் பணியாற்றுவதற்காக ஆயிரம் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து … Read more

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பன்றி உயிரிழப்பு.. பண்ணையைச் சுற்றி 1 கி.மீ வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி ஒன்று இறந்ததை அடுத்து, பண்னையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதமலை அடிவாரம் கல்லாங்குளம் பகுதியில் தனியார் பன்றி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் சில தினங்களுக்கு முன் பன்றி ஒன்று திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தது. அதன் உடலை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பிய நிலையில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பண்ணையிலுள்ள … Read more

மதுரை செங்கரும்பு தமிழகத்துக்கு பெருமை: புவிசார் குறியீடு பெறும் முயற்சிக்கு விவசாயிகள் வரவேற்பு

மதுரை: மதுரை செங்கரும்புக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி எடுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இடைத்தரகர்கள் இன்றி, செங்கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், விளாத்திகுளம் மிளகாய், சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, மூலனூர் குட்டை முருங்கை, மதுரை செங்கரும்பு உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், திட்டமிடப்பட்டு இருப்பதாக தமிழக … Read more

திருச்சி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில்  ரவிசங்கர் வசித்து வந்தார். இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்து விளையாடி அந்த விளையாட்டுக்கு அடிமையாகியம் உள்ளார். ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பெருமளவு பணத்தை இழந்துள்ளார். இதனால் நேற்று இரவு … Read more

சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் – எதிர்பார்ப்புகள் என்னென்ன?

சென்னை மாநகராட்சியின் 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் என்னென்ன இடம்பெறும் ? எதிர்பார்ப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.  சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மார்ச் 27-இல் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு மேயர், வார்டு உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு குறுகிய காலத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்தனர். இதனால் இந்த ஆண்டு பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கான பணிகள், புதிய  … Read more

ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு: “பதிலடி கொடுக்க வெயிட்டிங்” – பயிற்சியாளர் அரவிந்த்

ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு: “பதிலடி கொடுக்க வெயிட்டிங்” – பயிற்சியாளர் அரவிந்த் Source link

தமிழ் மொழியை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!

இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு நீதிமன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கிய இந்த விழாவில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  மேலும், இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு நீதிமன்றங்களை காணொளி கட்சி மூலம் … Read more

கோவையில் மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

கோவை: கோவையில் மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கியதில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள பூச்சியூர் என்ற பகுதிக்கு இன்று (மார்ச் 25) காலை 30 வயது உள்ள ஆண் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. இந்த யானை மீது சிமெண்ட் மின் கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அது உயிரிழந்தது. இதன்பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள வெள்ளாளபுரம் பஞ்சாயத்து முனியம்பட்டி சன்னியாசிகடை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). இவர் உரிமம் பெற்று பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள நிலத்தில் குடோன் அமைத்து, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த குடோனில் அமுதா(45), வேடப்பன்(75) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி, அமுதா இறந்தார். வேடப்பன் உடல் கருகி … Read more