அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவு!

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி இன்று தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இது குறித்து திமுக தலைமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் முன்னிலையில், இன்று ( மார்ச் 22 ) அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அதிமுகவைச் சேர்ந்த தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் … Read more

ஹோட்டலில் பாயா கேட்டு சண்டை போட்ட போலீஸ்காரர்கள்!!

சென்னை திருவொற்றியூரில் ஹோட்டலில் பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கணக்கர் தெருவில் உள்ள ஹோட்டலுக்கு ஐந்து காவலர்கள் நேற்று இரவு சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள், கடை ஊழியர்களிடம் பரோட்டாவுக்கு பாயா கேட்டுள்ளனர். பாயா இல்லை என்றும், குருமா மட்டுமே இருப்பதாக ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆத்திரம் அடைந்த காவலர்கள் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாகவும் தெரிகிறது. காவலர்கள் ஹோட்டலில் ரகளை செய்யும் வீடியோ … Read more

வரவு செலவு கணக்குகளை, துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு வீடாக சென்று கொடுத்த ஊராட்சிமன்றத் தலைவர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை, துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு வீடாக சென்று கொடுத்த ஊராட்சிமன்றத் தலைவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கே.நெடுவயல் கிராம ஊராட்சி மன்றத்தலைவராக இருக்கும் சரவணன் ஒவ்வொரு வருடமும் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக அறிவிப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர். Source link

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் 5 நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு – முழு விவரம்

சென்னை: சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் 5 ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் … Read more

ஓபிஎஸ்-க்கு வெள்ளிகிழமை வரை கெடு; அதிமுக வழக்கில் உயர்நீதிமன்றம் பரபர..!

அதிமுகவில் இரு தலைமைகளாக இருந்த , இபிஎஸ் இடையே பிரிவு ஏற்பட்டு, தற்போது உட்கட்சி மோதல்கள் வெடித்து வருகிறது. அதிமுகவின் பெரும்பாலான பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பின் நிற்பதால், பன்னீர்செல்வத்தின் நிலை கேள்விகுறியாகி உள்ளது. இந்தநிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் நிறைவடைந்தது. அதில் மட்டுமே மனு தாக்கல் செய்தார். எனவே இவர் போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த ஞாயிறு அன்று ஓபிஎஸ் … Read more

அதிமுக தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு; EPS தரப்புக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வம் தரப்பில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிக்கும் நிலையில், எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது என வாதிடப்பட்டது. ஜெயலலிதாவே நிரந்தர பொது செயலாளர் என … Read more

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன்: கரூர் அருகே நெகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட எழுதியாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(49). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மோகனகிருஷ்ணன்(21) கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.  இளைய மகன் நந்தா (17), லாலாபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். ஆறுமுகம் நேற்று முன்தினம் மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென நெஞ்சுவலி … Read more

குடிப்பழத்திற்கு அடிமை… நீங்க பார்த்தீங்களா? கோவை குணா மரணம் குறித்து ஆதவன் – மதுரை முத்து மோதல்

குடிப்பழத்திற்கு அடிமை… நீங்க பார்த்தீங்களா? கோவை குணா மரணம் குறித்து ஆதவன் – மதுரை முத்து மோதல் Source link

ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை!`ஆனால்., எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பகீர்!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த பதவிகள் இன்னும் காலாவதியாகவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் அனல் பறக்கும் வாதம் முன்வைக்கப்பட்டன. அதில், அதிமுக தரப்பில் (இபிஎஸ்),  வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் … Read more

ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டப் பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. அதைத்தொடர்ந்து மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற … Read more