பல்லை பிடுங்கிய ஏ.எஸ்.பி.பல்வீர் சிங்.. காவல் நிலைய கொடுமை..! காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்கு சென்ற 23 பேரின் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களுக்கு, புகார் தொடர்பான விசாரணைக்கு சென்றதால், ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிடம் பற்களை பறிகொடுத்தவர்கள் தான் இவர்கள்..! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக ஏ.எஸ்.பியாக கடந்த 4 மாதங்களாக பொறுப்பில் இருந்தவர் பல்வீர் … Read more

குட்கா தடை நீக்கம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஏப்.14-க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 14-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, … Read more

29ம் தேதி தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்; ராகுலுக்கு ஆதரவாக திருமாவளவன் போராட்டம்.!

வருகிற 29ம் தேதி ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டது முதல், அவருக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அந்த வகையில் தான், ‘‘ ராகுல் காந்தி அவர்களின் எம்.பி.பதவியைத் தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட பழிவாங்கும் அற்ப அரசியல் நடவடிக்கையே ஆகும். இது இயல்பாக நடந்தேறிய சட்ட நடவடிக்கை என்னும் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சங்பரிவார்கள் ஈடுபட்டாலும் மக்களிடையே அம்பலப்பட்டு … Read more

அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கிராமத்திற்கு செல்லும் நடை மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இதனால், கிராமத்திற்கு செல்ல பாதையின்றி பொதுமக்கள் தவிக்கின்றனர். அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையாக பெரியார்-வைகை பிரதான கால்வாயை கடக்கும் நடைபாதை மேம்பாலமாகும். இது கடந்த 1983ல் கட்டப்பட்டது. சில ஆண்டுகளாக இந்த பாலம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதனால் அதனை அகற்றிவிட்டு புதிய பாலம் … Read more

டாஸ்மாக் – விபச்சாரம்! நடிகர் பாலாஜி டிவிட்டில், திமுகவின் ராஜிவ்காந்தி பேசிய பழைய வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்!

தனியார் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் சீசன் 4 -ன் வெற்றியாளர் நடிகர் பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடையை மூட சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், திமுக ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்து இரு தினங்களுக்கு முன் டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவரின் அந்த பதிவில், “அன்புள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தயவுசெய்து டாஸ்மாக்கை மூடுங்க. ஆன்லைன் ரம்மியுடன் … Read more

#BREAKING அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. யாரும் போட்டியிட முடியாத வகையில் … Read more

கூடங்குளத்திற்கு சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!

தூத்துக்குடியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, நெல்லை அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 180 ஹைட்ரஜன் சிலிண்டர்களுடன் நெல்லை – நாகர்கோவில் சாலையில் சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கொங்கன்தான் பாறை விலக்கு பகுதியில் சாலை நடுவே கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த பெரும்பாலான சிலிண்டர்கள் சாலையில் சரிந்து விழுந்தன. தீயணைப்புத்துறையினர், சிலிண்டர்கள் மூலம் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க அதன் மீது தண்ணீரை பீச்சி அடித்து குளிர்வித்தனர். இதனை … Read more

போலீஸால் சுடப்பட்டவருக்கான சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம்: கோவை காவல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காவல் துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தாக்கல் செய்யப்பட்ட தெளிவற்ற ஆவணத்துக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை மாநகர காவல் ஆணையர் புதன்கிழமை நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக … Read more

திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் ஆழித்தேரோட்ட விழா வரும் 1ம் தேதி நடைபெறுவதையொட்டி இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 5ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி … Read more