திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளை

திருவள்ளூர்: வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் நகைக்கடை நடத்திவரும் ராமேஸ்லால் என்பவரின் கடை ஊழியர் சோகன்லால் கொண்டு சென்ற நகைகள் பூச்சி அத்திப்பட்டு பகுதியில் உள்ள அடகு கடைக்கு கொண்டு சென்றபோது 175 சவரன் நகைகள், ரூ.1.10லட்சம் பணம் ஆகியவை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

சேலம் : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற என்ஜினீயர்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு, சதீஷ்குமார் திடீரென தான் மறைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார் ஓடிவந்து அவரை தடுத்து நிறுத்தி அவரை ஓரமாக அழைத்து வந்து உட்கார வைத்தனர். அதன் பின்னர், சதீஷ்கு மாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அவர் தெரிவித்ததாவது, “சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு … Read more

புதுச்சேரியில் பதற்றம்: சட்டப்பேரவையை முற்றுகையிட வந்த பொதுப்பணித் துறை ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட வந்த பொதுப் பணித்துறை ஊழியர்களை தடுத்ததால் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மேனிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி போராட்டத்தை தொடர்ந்தனர். அதேநேரத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினரை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். புதுச்சேரியில் பொதுப் பணித்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், பொதுப்பணி ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த 750 … Read more

அண்ணாமலை கேட்ட அரியர்ஸ் ரூ.29,000… அப்ப மோடி சொன்ன ரூ.15 லட்சம்? வறுத்தெடுத்த டிஆர்பி, வாழப்பாடியார் மகன்கள்!

தமிழக பட்ஜெட் 2023-24 இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் அறிவிப்பு இடம்பெற்றது. வரும் செப்டம்பர் மாதம் முதல் தகுதியான பெண்களுக்கு மட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை கோரிக்கை இதற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

அறநிலையத்துறையின் கீழ்உள்ள கோயிலில் திருவிழா நடத்த குழுஅமைக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: அறநிலையத்துறையின் கீழ்உள்ள கோயிலில் திருவிழா நடத்த குழுஅமைக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அறநிலையத்துறை கீழ் உள்ள கோயிலின் விழா அறிவிப்பில் தனி நபர் செல்போன் எண் அச்சிடுவது ஏன். மொபைல் போன் எண்கள் இல்லையெனில் கோயில்களுக்கு நன்கொடை செலுத்த இயலாதா என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐகோர்ட் உத்தரவுகளை பின்பற்றாதது பற்றி அறநிலையத்துறை மதுரை மாவட்ட இணை ஆணையர் விளக்கமளிக்க ஆணையிட்டுள்ளனர்.

நாம் வடக்கு தெற்கு என பிரிந்துள்ளோம்; கோவையில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி பேச்சு

நாம் வடக்கு தெற்கு என பிரிந்துள்ளோம்; கோவையில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி பேச்சு Source link

கிருஷ்ணகிரி : வனபகுதியில் வாலிபர் எரித்து கொலை..! போலீசார் தீவிர விசாரணை..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் தீயில் எரிந்த நிலையில், வாலிபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி … Read more

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!!

மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த மயூர் (45) என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். எனவே அப்பகுதியிலுள்ள சாஸ்திரி மைதானத்தில் அடிக்கடி தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார். அந்த வகையில் நேற்று இவர் மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பதற்றமடைந்து திடீரென கீழே அமர்ந்தார். பின்னர் … Read more

மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்.. மின்வாரியத்தைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்..!

மாமல்லபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரியத்தைக் கண்டித்து, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் என்பவரும் அவரது 10 வயது மகன் ஹேமநாதனும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தாழ்வாகச் சென்றுகொண்டிருந்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். கடந்த ஓராண்டு காலமாகவே அந்த மின்கம்பி பழுதாகி தாழ்வாக சென்றுகொண்டிருந்ததாகவும் பலமுறை புகாரளித்தும் மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் உறவினர் குற்றம்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட … Read more

பழைய பென்ஷன் திட்ட அறிவிப்பு இல்லாததால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்பு ஏமாற்றம் | தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

மதுரை: தமிழக அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “தமிழகத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பங்கு தொகையாக சுமார் ரூ.60 ஆயிரம் கோடியை அரசாங்கம் … Read more