குமாரபாளையம் கோம்புபள்ளம் ஓடையில் 50 டன் கழிவுகள் அகற்றம்

குமாரபாளையம்: நான்கு வருடங்களாக வாரப்படாத கோம்பு பள்ளத்தை தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பணியின் முதல் நாளில் 50 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. குமாரபாளையம் நகராட்சியில், காவல் நிலையம் பின்புறமுள்ள கோம்பு பள்ளம் ஓடை கடந்த 4 வருடங்களாக தூர்வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் நிரம்பி கழிவுகள் தேங்கியது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். காவல் நிலையம் பின்புறத்திலிருந்து சேலம் ரோடு வரையில் ரூ.99 லட்சம் செலவில் நமக்கு நாமே … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு! ஏன்? அதிர்ச்சி காரணம்

இன்புளுயன்சயா காய்ச்சல் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் வழக்கத்தை விட அதிகமாக வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக அரசு இராஜாஜி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மக்களை இன்புளுயன்சா காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காய்ச்சல் நான்கு நாட்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து மதுரை அரசு … Read more

ரொம்ப மன வேதனையா இருக்குங்க – திமுக எம்.பி., திருச்சி சிவா பரபரப்பு பேட்டி!

திருச்சி : திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவிற்கும் இடையேயான மோதல் முற்றி அடிதடி, ரவுடிசம் வரை சென்றுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவுக்கு, திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டியாதல், ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மீதும், அவரின் ஆதரவாளர் வீடு மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே, கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையறிந்த நேருவின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து திருச்சி … Read more

''இஎஸ்ஐ மருந்தகத்தில் முறையாக சிகிச்சை வழங்கப்படுவதில்லை'' – டிஎன்பிஎல் தொழிலாளர்கள் போராட்டம்

கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் இஎஸ்ஐ மருந்தகத்தில் முறையான சிகிச்சை வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் 3,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வேலாயுதம் பாளையத்தில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். இங்கு முறையான சிகிச்சை வழங்கப் படுவதில்லை எனக்கூறி 100க்கும் மேற்பட்ட பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் … Read more

பேசுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால்.. – மன வேதனையை வெளிப்படுத்திய திருச்சி சிவா

அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டியதற்காக திருச்சி சிவாவின் வீடு, கார் ஆகியவை நேற்று அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் புகுந்து சிவாவின் ஆதரவாளர்களையும் தாக்கினர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை அறிவித்துள்ளது. சம்பவம் நடந்த போது திருச்சி சிவா வெளிநாட்டில் இருந்தார். இன்று நாடு திரும்பிய அவர் திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், … Read more

மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் குவிந்த மக்கள்: கிடைத்தவற்றை உற்சாகமாக அள்ளினர்

மேலூர்: மேலூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள சாணிபட்டியில் உள்ளது மலத்தான் கண்மாய். இக்கண்மாயில் தற்போது முழங்கால் அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் முழுமையாக வற்றும் முன்பாக மீன்பிடி திருவிழா நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து இக்கண்மாயில் நேற்று கிராம மக்கள் திரளாக கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா நடைபெற்றது. கண்மாய்க்கரையில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று காலை மீன்பிடி … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை எப்படி இருக்கிறது? – மருத்துவமனை அறிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, கடந்த மார்ச் 10-ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு கட்சி மற்றும் நலத் திட்ட … Read more

தருமபுரி | பட்டாசு குடோன் வெடி விபத்து – முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்!

தருமபுரி, பென்னாகரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.    Source link