காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்.. திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது

திருச்சியில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் புதிய இறகு பந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த நிலையில், நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி, அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக்கொடி காட்டினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கருப்புக்கொடி காட்டிய 12 பேரை … Read more

திருச்சியில் காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல்: திமுக நிர்வாகிகள் 5 பேர் கைது

திருச்சி: திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்துக்குள் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் திமுக நிர்வாகிகள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு, எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் … Read more

கோடை காலத்தை சமாளிக்க சுத்தமல்லி தடுப்பணையில் மதகுகளை அடைத்து தண்ணீர் சேமிப்பு: உறை கிணறுகளை சென்றடைய ஏற்பாடுகள் தீவிரம்

பேட்டை: வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து வளம்கொழிப்பதோடு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களின்  தாகம் தீர்க்கும் தாயாகத் திகழ்கிறது. அத்துடன் விவசாய பணிகளுக்கான தேவைகளையும் நிறைவுசெய்து வருகிறது. பொதுவாக நம் முன்னோர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் குடிநீர் தேவை, விவசாய பணிகளுக்காக ஏரி, குளம், கண்மாய், நீர்த்தேக்கம், நீர்வழித்தடங்கள் போன்றவற்றை திட்டமிட்டு உருவாக்கி செயல்பட்டு வந்தனர். தற்போது பெருகி வரும் மக்கள் தொகை, அதிக வேளாண் உற்பத்தி … Read more

கோடை வெயிலிலிருந்து சரும பிரச்னைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் அறிவுரை!

கோடை வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். கோடை காலத்தில் வெயில் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலானது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும், வெப்ப காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கோடையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என இந்திய … Read more

ஜார்க்கண்ட கல்வி அமைச்சருக்கு திடீர் உடல்நலக் குறைவு; சென்னை மருத்துவமனையில் அனுமதி

ஜார்க்கண்ட கல்வி அமைச்சருக்கு திடீர் உடல்நலக் குறைவு; சென்னை மருத்துவமனையில் அனுமதி Source link

ஹெல்மெட் அணியாமல் வந்த கூலித் தொழிலாளி.! 20 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரைச் சேர்ந்தவர் ஆதவன். கூலித் தொழிலாளியான இவர், நெய்வேலி இந்திரா நகரில் மரவேலை செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.  இதையடுத்து, இவர் வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆதவனை வழிமறைத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதாகக் கூறி அபராதம் விதித்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து, ஆதவன் தனது வீட்டிற்கு சென்றவுடன் அவருடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவருடைய வாகன எண்ணைக் குறிப்பிட்டு … Read more

அதிர்ச்சி! 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்!!

இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்கு 50,000 மாணவர்கள் வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. +2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள் கிழமை தேர்வு தொடங்கிய நிலையில், இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 50,000 மாணவர்கள் ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்கு வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ்ப்பாடத் தேர்வை 50,000 … Read more

கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வங்கி கடனுக்காக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரியும், கடனைத் திரும்ப செலுத்த போதிய கால அவகாசம் வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வங்கிகள் தற்போது கடனை திரும்ப செலுத்தும் … Read more

மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் சாவு

பவானி: சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலியானது. சித்தோட்டை அடுத்த பேரோடு, கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் ஆடு, மாடு மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு விவசாயத் தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு 8 செம்மறி ஆடுகளை கடித்து குதறியது. இதில் 8 ஆடுகளும் பலியானது. தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை … Read more

"அன்று கைது செய்த போலீஸே, இன்று பாதுகாப்பு தந்தனர்!"-கோ பட பாணியில் பேசிய அமைச்சர் உதயநிதி

“தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தில் மொழிகள் ஆய்வகம் திட்டமானது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இன்று திறந்துவைத்தார் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது … Read more