சென்னையில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட முடிவு – காரணம் இதுதான்!

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி மற்றும் செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மெட்ரோ ரயில் நிலையம் … Read more

தன்னை வீடியோ எடுத்த நபரை ஆத்திரத்தில்.." தாக்கி மிதித்தே கொன்ற யானை!

கிருஷ்ணகிரி அருகே செல்போனில் படம் பிடிக்க முயன்ற இளைஞரை காட்டு யானைகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்றையும் யானைகள் சேதப்படுத்தி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இந்த யானைகள் ஊருக்குள் வந்து விடும். கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு காட்டு யானைகளை  ராம்குமார் என்ற இளைஞர் செல்போனில் படம் பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது காட்டு யானைகள் … Read more

தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழக அரசு செய்யும் சாதனைகள்: பட்டியலிட்ட ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ( மார்ச் 14) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE’23 50ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், சென்னை மேயர் பிரியா, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் … Read more

பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு: காரைக்காலில் கடைகள் அடைப்பு

காரைக்கால்: புதுச்சேரி அரசின் மின்துறை மூலம் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கண்டிப்பது, மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், குப்பை வரி ரத்து தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்கால் மக்கள் போராட்டக்குழு தெரிவித்திருந்தது. இதற்கு திராவிடர் கழகம், முஸ்லிம் லீக் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள், சில … Read more

’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ – ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!

Zoho இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில புகார்களை தொடுத்திருந்தார். குறிப்பாக ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தங்களின் மகனையும் கைவிட்டதாகவும், தனது நியாயமான பங்கைப் பெறுவதைத் ஸ்ரீதர் தடுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதை மறுத்து நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இந்தியாவில் பிறந்தவரான ஸ்ரீதர் வேம்பு, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு வாழ்ந்து, அங்கிருந்தபடியே ZOHO நிறுவனத்தை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு, … Read more

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி Source link

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

ஆன்லைன் ரம்மி நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழப்பு ஏற்பட்டதில் சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகன், ஒன்றரை வயது மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரகுவரன் என்பவரும் … Read more

கோவில் சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. 13 வயது சிறுமி பலியான சோகம்..!

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தின் போது, தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியதால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தங்கள் கிராமத்தில் சம்பவத்தன்று இரவு அங்காளம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டியில் சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மாட்டு வண்டியின் பின் புறம் இருந்த ஜெனரேட்டர் அருகில் அமரும் ஆர்வத்தில் 13 வயது … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் குறித்து விசாரணை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு ஷபீருல்லா என்ற தனது … Read more