உதவித் தொகையை உயர்த்தியது தமிழ்நாடு அரசு!!

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். இன்று பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அவசர விபத்து சிகிச்சை மருத்துவமனையை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை ரூபாய் 95.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும், இம்மருத்துவமனை செப்டம்பர் மாதம் துவங்கப்படும் … Read more

வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு: மேலும் 6 மயில்கள் உயிரிழப்பு..!

கரூர் மாவட்டத்தில் பீர்க்கங்காய் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட தோட்டத்தில் இரை மேய்ந்த மேலும் 6 மயில்கள் இறந்தன. குளித்தலை அருகிலுள்ள பிள்ளபாளையத்தில் பூச்சிமருந்து அடிக்கப்பட்ட தோட்டத்தில் இரை தேடிய 8 மயில்கள் நேற்று இறந்தது தொடர்பாக விவசாயி முருகானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்றும் 6 மயில்கள் அதே தோட்டத்தில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் மயில்களை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியதோடு, தோட்டத்தில் சிதறிக்கிடந்த விஷம் கலந்த நெல்மணிகளை 100 நாள் பணியாளர்களைக் கொண்டு அப்புறப்படுத்தினர். மயில்கள் … Read more

ரூ.730.86 கோடி வரி பாக்கியை அரசிடம் ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப்புக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை, ஒரு மாதத்தில் செலுத்தும்படி, ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி … Read more

பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்

கேடிசி நகர்: பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சிகளை ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர். கணவரின் குடிப்பழக்கத்தால் குடும்பப் பெண்கள் படும் அவதிகள், ஆண்களின் அலட்சியத்தால் ஏற்படும் சாலை விபத்துகள், சூதாட்டத்தின் விளைவுகள், பஸ் நிலையங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள், குழந்தை திருமணம் என பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் நிலை காட்சிகளாக ‘தத்ரூபமாக’ நடித்துக் காட்டினர். இந்த … Read more

சாலை விபத்தில் உதவுபவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு.!

சாலை விபத்தில் உதவி செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேலும் தமிழக போக்குவரத்து குறித்த கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து வருகிறார். இந்த நிலையில் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில்  தமிழக அரசால் … Read more

ரூபாய் நோட்டுகளை அள்ளி எரிந்த காங்கிரஸ் தலைவர்!!

கர்நாடகாவில் காங்கிரஸ் பேரணியின் போது அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 500 ரூபாய் நோட்டுகளை வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் அறிவுப்புக்கு முன்னரே அங்கு ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர … Read more

மளிகை கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த மளிகை கடைக்காரர் மகன் கைது..!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மளிகை கடைக்கு வரும் பெண்களை ஆபாச கோணத்தில் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக  மளிகை கடை உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்தனர். தழுதாளி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் அலாவுதீன். இவரது மகன் முகமது ஜுபைர் . கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பெண்களை, அவர்களுக்கு தெரியாமல் ஆபாச கோணத்தில் செல்போனில் வீடியோ எடுப்பதை வழக்க மாக்கிய ஜூபைர், அதை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக திண்டிவனம் அனைத்து … Read more

“தொலைந்துவிடுவீர்கள்…” – தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition. குழந்தையைக் … Read more