பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவலர்கள்
சென்னை: பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வரும் நிலையில், சென்னை முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு ஏப்.8, 9 ஆகிய தேதிகளில் வர உள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு ஏப்.8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வந்தடைகிறார். … Read more