மளிகை கடைக்குள் மங்களகரமாக கிளினிக்.. கைராசி போலி மருத்துவர் கைது..! எடுபடாமல் போன இருமல் நாடகம்

மளிகைக்கடைக்குள் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை கையும் களவுமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.10 வகுப்பு மட்டுமே படித்த கைராசி மருத்துவர் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் உள்ளதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் கிராமத்தில் மளிகைகடை நடத்தி … Read more

அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரேயொரு சங்கம் போராட்டம்; பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் நாசர்

திருவள்ளூர்: அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரே ஒரு பால் உற்பத்தியாளர் சங்கம் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தமிழக பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் புதிய நூலக கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்பங்கேற்ற அமைச்சர் பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆவினில் 9,354 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. அதில் ஒரேஒரு சங்கத்தினர் மட்டும் என்னைசந்தித்து … Read more

அத்துமீறி நடந்த இளைஞர்.. கருங்கல்லை வீசி வீரத்துடன் எதிர்கொண்ட இளம் பெண் ஆசிரியை!

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் பைக்கில் வந்த வாலிபர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் உத்திரமேரூரில் நடந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த இடையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் மெய்யூர் ஓடையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதன்படி நேற்று (மார்ச் 17) வழக்கம்போல தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆசிரியையை பைக்கில் பின் தொடர்ந்து வந்த இளைஞர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் … Read more

யானைகேட் பாலத்தின் கட்டுமானம் எப்போது நிறைவுபெறும்? தெற்கு ரயில்வேயின் அப்டேட்

யானைகேட் பாலத்தின் கட்டுமானம் எப்போது நிறைவுபெறும்? தெற்கு ரயில்வேயின் அப்டேட் Source link

அதிர்ச்சி! மருமகளை செங்கல்லால் அடித்த மாமனார்!!

வேலைக்கு சென்ற மருமகளை மாமனார் செங்கல்லால் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த காஜல் (27) என்பவருக்கு பிரவீன் குமார் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் குழந்தை உள்ளது. பட்டப்படிப்பு முடித்திருக்கும் காஜல் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்தாரை மட்டுமே கவனித்து வந்துள்ளார். காஜலின் கணவர் பிரவீன் தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது சம்பளத்தால் குடும்பத்தை … Read more

தமிழகத்தில் கோடை மழை தொடக்கம்; சென்னையில் ஆலங்கட்டி மழை: 20-ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை:தமிழகத்தில் கோடைமழை தொடங்கியுள்ளது. தென் சென்னையின் பல இடங்களில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் பல இடங்களில் நேற்று முன்தினமும், நேற்றும்மழை பெய்தது. தென் சென்னைபகுதிகளான வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக்கண்டு ரசித்த குழந்தைகள் ஐஸ்கட்டிகளை சேகரித்தும்விளையாடியும் மகிழ்ந்தனர். மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, உள்ளகரம் – புழுதிவாக்கம், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: போட்டிக்கு ஆள் இல்லையா? ஆடாமல் ஜெயிக்கும் எடப்பாடி?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த உட்கட்சி மோதல்களில் ஒவ்வொரு முறையும் தனது பலத்தை நிரூபித்து வந்த நிலையில் தற்போது உச்ச பதவியில் ஏறும் வகையில் காய் நகர்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். நாளை (மார்ச் 19) வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ஆகும். அதேபோல் … Read more

”சிவா எனக்கு தம்பி. சமாதானமாகி விட்டோம்”..ஆர்டர் போட்ட முதல்வர்.. நேரில் சென்ற கே.என்.நேரு

திமுகவின் மாநிலங்களவை தலைவரும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மற்றும் நாற்காலிகளை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் ஆதரவாளர்களே அடித்து துவம்சம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சி சார்பில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த … Read more