நாமக்கல் | தேசியகீதத்துக்கு மரியாதை அளிக்காத எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த பொம்மை குட்டை மேட்டில் கடந்த 28-ம் தேதி நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். இங்கு ஏராளமான போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா நிறைவில் தேசியகீதம் பாடப்பட்டபோது விழா பந்தலின் கடைசி பகுதியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம், எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து தேசிய … Read more

ஈரோடு கிழக்கு – எகிறி அடித்த எடப்பாடி: அவ்வளவு தானா ஓபிஎஸ் மவுசு?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகான அரசியல் நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் ஓபிஎஸ்ஸின் பலம் என்ன என்பதை அவருக்கே காட்டும் விதமாக இந்த தேர்தல் அறிவிப்பு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது தான் ஜெயலலிதா ஸ்டைல்!எந்த தேர்தல் என்றாலும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து எதிர் கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கே ஷாக் கொடுப்பது தான் ஜெயலலலிதா ஸ்டைல். கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே அத்தனை … Read more

பைபர் படகில் டீசல் தீர்ந்ததால் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 4 பேர் கரை திரும்பினர்..!!

நாகை: கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்று கரை திரும்ப முடியாமல் தத்தளித்த 4 மீனவர்கள் கரை திரும்பினர். பைபர் படகில் டீசல் தீர்ந்ததால் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் சக மீனவர்கள் உதவியோடு கரை திரும்பினர்.

ஈரோடு: குடும்பத் தகராறில் அக்கா மகன்களை கொலை செய்த தாய்மாமன் உட்பட இருவர் கைது

ஈரோட்டில் குடும்பத் தகராறு காரணமாக அக்கா மகன்களை கொலை செய்த தாய்மாமன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனியைச் சேர்ந்த இயற்கை உணவு பொருட்கள் விற்பனை செய்து வருபவர்கள் சகோதரர்களான கௌதம் மற்றும் கார்த்தி, இவர்களை கடந்த திங்கட் கிழமையன்று அவர்களது தாய்மாமன் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். இதனையடுத்து நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் தலைமையிலான 5 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை போலீசார், கொலையாளியை தீவிரமாக … Read more

ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்த்… லுங்கி டான்ஸ் ஆடிய ஹோட்டல் ஊழியர்கள் : வைரல் வீடியோ

ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்த்… லுங்கி டான்ஸ் ஆடிய ஹோட்டல் ஊழியர்கள் : வைரல் வீடியோ Source link

தேனி : கழிவறையை சுத்தம் செய்யும் அரசுப்பள்ளி மாணவர்கள் – வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! 

தேனி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில், 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும்,  தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்களும் உள்ளனர்.  இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் இருக்கும் இரண்டு மாணவர்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு, பின்னர் அந்த தண்ணீர் … Read more

340 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!!

சமீபகாலமாக ஐடி துறையில் நடந்து வரும் பணிநீக்கங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் தற்போது பிரபல சிப் நிறுவனமான இன்டெல் தங்களது நிறுவனத்தில் இருந்து 340 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காகவும், நடப்பு ஆண்டில் லாபத்தை அதிகரிப்பதற்காகவும் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜடி நிறுவனங்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக தொடங்கியுள்ளது என்றே கூறலாம். பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டா, அமேசான், பிலிப்ஸ், சேல்ஸ்ஃபோர்ஸ், காயின்பேஸ், மைக்ரோசாஃப்ட் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு: கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், கூட்டணிக் கட்சிக்காக தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். கட்சி பொறுப்புகள்: ஈரோடு கிழக்கு … Read more

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு; ட்விஸ்டை உடைத்த எடப்பாடி பழனிசாமி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக தரப்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாமல் தாமதமாகி வந்தது. அதிலும் ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டனர். தீவிர ஆலோசனை இதற்காக பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இருதரப்பும் மாறி மாறி ஆதரவு … Read more

கொடைக்கானல் – வத்தலகுண்டு சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: கொடைக்கானல் – வத்தலகுண்டு பிரதான சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து 4 பேர் படுகாயமடைந்தனர்.