மீந்து போன சாதத்தில் மொறு மொறு ஸ்நாக்ஸ்.. குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும்!

மீந்து போன சாதத்தில் மொறு மொறு ஸ்நாக்ஸ்.. குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும்! Source link

நாகப்பட்டினம் : சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை பலி.!

சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் பால்ராஜ் – கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற மகளும், மரியா ஆரோனிகா என்ற 8 மாத குழந்தையும் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தையை பெற்றோர் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் … Read more

கோஸ்ட் இமேஜ் அம்சத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை..!! முதல் முறையாக ஈரோடு இடைத்தேர்தலில் அறிமுகம்..!!

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர்களாக தகுதியை கொண்ட 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்து சேரலாம். அந்த வகையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. இதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர் பெயர், முகவரி விவரம் அடங்கியிருக்கும். இந்த நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள … Read more

சொத்துக்காக சகோதரரை கடத்தித் தொங்கவிட்ட மாஃபியா சிஸ்டர் கேங்..! மனநல காப்பகத்தில் அடைத்தனர்

பல்லடம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக சகோதரரை கடத்தி வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்கு கடத்திச்சென்று மனநலக் காப்பகத்தில் சேர்த்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சிவக்குமார் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் உள்ளனர். அம்பிகாவுக்கு திருமணமாகி பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு … Read more

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் மலர் தூவி அஞ்சலி

சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், ஆளுநர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதேபோல, எழும்பூர் அரசு … Read more

ஆளுநருடன் தேநீர் விருந்து – அரசியல் பின் வாங்கலா? ஸ்டாலின் அளித்த பதில்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’தொடரில் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். கேள்வி: சமீபத்தில் உங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக எதைப் பார்க்கிறீர்கள்? பதில்: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாகி இருப்பதுதான் அண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த செய்தி! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சந்திரசூட் அவர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் ஆக வேண்டும் என்று, … Read more

பிரம்மாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு : வைரல் புகைப்படங்கள்

பிரம்மாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு : வைரல் புகைப்படங்கள் Source link

சாதாரண மக்கள் முதல் ஆளுநர் வரை மிரட்டும் விசிக கட்சியை தடை செய்ய பாஜக கோரிக்கை.!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கிய நிலையில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை சிவா மற்றும் பழனிவேல் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீண்டும் ஆண்டிமடம் தாலுக்காவை சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும்.  சாதாரண மக்கள் முதல் ஆளுநர் … Read more

மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு!!

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் இயங்கிவரும் ராமகிருஷ்ணாபுரம் குருகுல பள்ளியில் மாணவர்கள் சிக்கனும், கத்தரிக்காயும் சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து முதலில் சுமார் 50 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. அவர்களைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு மேலும் 50 மாணவர்களுக்கு அதே போன்று வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அச்சம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை … Read more

‘இரட்டை இலை’ சின்னம் கோரும் இபிஎஸ்ஸின் இடைக்கால மனு: தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் … Read more