முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும்… அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றியம், பனைமலை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியசாமி வழங்கினார். இந்த விழாவில் பேசிய அவர் தமிழகத்தில் 60 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் … Read more

வரும் 31-ம் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு அபராதம்.. ?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இதையடுத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. … Read more

ரூ.10 லட்சம் பணத்துக்காக வங்கி பெண் ஊழியரை காதலித்து கடத்திக் கொலை..! நாடக காதல் விபரீதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு கடத்தல் நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்தனர்.  நம்பி வந்த காதலியை 10 லட்சம் ரூபாய் பணத்துக்காக பலிகொடுத்த சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. ஓசூர் அருகே நெரிகம் கிராமத்தை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் பிரியங்கா. 22 வயது மாற்றுத்திறனாளியான இவர் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். பிரியங்காவை … Read more

பழநி முருகன் கோயிலில் ஆகம விதிப்படியே மண்டல பூஜை – நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

சென்னை: பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவால் எந்த தடையும் இல்லாமல் ஆகம விதிப்படியே 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர்தாக்கல் செய்த மனுவில், “கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவிலேயே நடைபெறு கிறது. ஆகம விதிப்படி நடைபெறவில்லை. தைப்பூச … Read more

பவானிசாகர் அருகே நாயை வேட்டையாட துரத்திய சிறுத்தை: வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி கல் உடைக்கும் தனியார் கிரசர் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிரசர் பகுதியில் ஒரு நாய் காவலுக்கு படுத்திருந்தது. அப்போது அங்கு வந்த சிறுத்தை, நாயை வேட்டையாட துரத்தியது.  ஆனால், நாய்  வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் … Read more

திருப்பூர் : மகளிர் சுய உதவி குழுவில் கடன்.! தலைமறைவான கணவன்-மனைவி கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் கடனை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ரேகா (35). இதே பகுதியை சேர்ந்த சாந்தாமணி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு, மகளிர் சுய உதவி குழு மூலம் ரேகா, சாந்தமணியிடமிருந்து ரூபாய் 68,000 கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து ரேவதி பெற்ற கடனை … Read more

காதலிக்கும் போது இனிக்குது, கல்யாணம் பண்ண கசக்குதா?’ எஸ்ஐ மகன் செய்த கேவலமான செயல்..!!

வேலூர் மாவட்டத்தின் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் நேற்று காலை சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், சடலமாக கிடந்த பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. இதன் மூலம் … Read more

‘ஏ’ சான்றளிக்கப்படும் படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதி மறுப்பு – மத்திய அரசு, தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு

சென்னை: வயது வந்தவர்களுக்கு மட்டும் என ஏ சான்று பெறும் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் தணிக்கை வாரியம்பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரஷ்னேவ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “பல திரையரங்குகளில் ஏ சான்று பெற்ற படங்களுக்குசிறுவர்களையும் வயது வித்தியாசமின்றி அனுமதிக்கின்றனர். இவ்வாறு சிறுவர்களை ஏ படங்களுக்கு அனுமதிக்கக்கூடாது என ஏற்கெனவே மத்திய தணிக்கை … Read more