இபிஎஸ்.,க்கு போதிய பாதுகாப்பு வேண்டும்… மாவட்ட எஸ்.பி.,யிடம் ஆர்.பி உதயகுமார் மனு..!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற உள்ள இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மேற்பார்வையில் நடைபெற்று … Read more

உடற்கூராய்வு செய்யப்பட்ட பத்மபிரியாவின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்

சென்னை அண்ணாசாலையில் கட்டட சுவர் விழுந்து பலியான ஐ.டி.ஊழியர் பத்மபிரியாவின் உடற்கூராய்வு முடிந்து, அவரின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு ஆம்புலன்சில் உடல் கொண்டு செல்லப்பட்டது. பழமையான தனியார் கட்டத்தை இடிக்கும்போது, சுவர் இடிந்து, சாலையில் நடந்து சென்ற பத்மபிரியா மீது விழுந்ததில், அவர் உயிரிழந்தார். விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, பத்மபிரியாவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து வெளியே கொண்டுவரப்பட்ட உடலை … Read more

சிவகாசி மாநகராட்சி கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் – திமுக கவுன்சிலர் மீது மதிமுக கவுன்சிலர் கொலை மிரட்டல் புகார்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் கருத்துகேட்பு கூட்டம் பழைய நகராட்சி கட்டித்தில் நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா முன்னிலை வகித்தார். சிவகாசி மாநகராட்சியில் நடைபெறும் மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் அதிகாரிகள் மீது லஞ்ச புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த மாத கவுன்சில் கூட்டம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, … Read more

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை:  நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.351.12 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு 303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:  பச்சைமலை, கொல்லிமலை, கபிலமலை, திருச்செங்கோடு மலை, சேர்வராயன் மலை … Read more

திருமணமாகாத பெண் போலீஸ் ஏட்டு தற்கொலையா.?! சென்னை ரயிலில் அடிபட்டு மரணம்.! 

சென்னை மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியில் 42 வயதான ஸ்ரீபிரியா என்பவர் வசித்து வந்தார். ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் லேட்டாக இவர் பணிபுரிந்து வந்த நிலையில், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு அக்கா ஆகியோர் திருமணம் செய்து கொண்டு வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ பிரியாவின் தந்தை இறந்து விட அவரது தாயும் இரு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். பிரியா … Read more

சேலம் அருகே கூலமேட்டில் ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த 600 காளைகளை அடக்கிய 300 வீரர்கள்

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிபாய்ந்த 600 காளைகளை, 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு, சிலிர்த்தெழுந்து அடக்கி காட்டி, பரிசுகளை வென்றனர். மாடுபிடி வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் ஆட்சியர் கார்மேகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள் … Read more

அரசு பேருந்து மோதி கோயில் குதிரை உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி பச்சைவாழி அம்மன் கோயிலுக்கு சொந்தமான குதிரை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கொணலவாடி கிராமம். இந்த கிராமத்தில் பழமையான பச்சைவாழி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர் ஒருவர் கடந்த வருடம் குதிரை ஒன்று நேர்த்திக் கடனாக வழங்கினார். இந்த குதிரை கோயில் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த வழியாக சென்ற … Read more

"ஆதார் எண்ணை எங்ககிட்ட பதிவு செய்ங்க… மாசம் 500 ரூபாய் வரும்"- மூதாட்டியை ஏமாற்றி கொள்ளை

சேலத்தில் ஆதார் எண்ணை பதிவுசெய்ய வந்துள்ளதாகக் கூறி, மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை பெரியகிணறு தெருவில் தனியாக வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. அவரது வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத பெண் ஒருவர், ஆதார் எண்ணை எங்களிடம் இந்த இடத்தில் பதிவு செய்தால் மாதம் 500 ரூபாய் வரும் என்று தெரிவித்து மூதாட்டியிடம் ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கூறியுள்ளார். … Read more