குட்கா தடை ரத்து | உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு: மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு … Read more

‘தமிழ் நாய்டு.. கேரேளா..’ – ஒன்றிய அரசு இணையதளத்தால் சர்ச்சை.!

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்த இந்தியா, 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாடானது. அதன்படி, இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டன. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட கடமைப் பாதையில் அலங்காரங்கள், அணிவகுப்பு, பாதுகாப்பு … Read more

கிணற்றில் விழுந்த சிறுத்தை பலி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் அம்புரூஸ் வலைவு ஏலமன்னா அருகே கல்கடவு பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிநீர் கிணற்றில் நேற்று காலை சிறுத்தை ஒன்னறு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர் முரளிதரன் சென்று பார்வையிட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் பிதர்காடு வனச்சரகர் அய்யனார் மற்றும் வனவர் பெளிக்ஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: "எங்கள் கூட்டணி கட்சி ஆதரவு, எங்களுக்குத்தான்"- ஜெயக்குமார் பேச்சு

“ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூடி விரைவில் முடிவுசெய்து வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை செலுத்துவதற்கான அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை … Read more

நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி… ஆப்பிளை சாப்பிடும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்

நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி… ஆப்பிளை சாப்பிடும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள் Source link

#கன்னியாகுமரி : குடியரசு தினத்தன்று திருட்டுத்தனமாக மது விற்பனை.. 21 பேர் கைது.!

தமிழகத்தில் பொது அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்தாலோ, மதுக்கடைகள், விற்பனைக் கூடங்களை திறந்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தையொட்டி … Read more

அதிர்ச்சி! சொமோட்டோ ஊழியரை கொடூரமாக தாக்கிய கும்பல்!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த திருமலைவாசன் (22) என்பவர் சொமேட்டோ நிறுவனத்தில் உணவு விநியோக பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் இரவு 10 மணிக்கு காட்பாடி பகுதியில் உணவு விநியோகம் செய்ய பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த 3 பேர் அவரது பைக் மீது திடீரென மோதியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்துபோன திருமலைவாசன் பைக்கில் வந்தவர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த மேலும் 2 பேர் என 5 பேரும் சேர்ந்து … Read more

மத்திய அரசின் வலைதளத்தில் ‘தமிழ்நாடு’ பெயரில் எழுத்துப் பிழை – திமுக கொந்தளிப்பு

சென்னை: ‘தமிழ்நாடு’ன்னு கூட எழுதத் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு தமிழ்நாடு தவிப்பதாக திமுக ஐ.டி.விங்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நேற்று (ஜன.26) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றிவைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர், ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் … Read more

தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; தமிழக அரசுக்கு புதிய சிக்கல்.!

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ‘ஜாக்டோ – ஜியோ’ கூட்டமைப்பாக செயல்படுகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். இதனால், தி.மு.க., அரசு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஒன்றே முக்கால் ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே, … Read more

திருப்பூரில் பிரமாண்டமாக தொடங்கிய 19-வது புத்தகத் திருவிழா: 150 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்

திருப்பூர்: திருப்பூரில் பிரமாண்டமாக 19-வது புத்தகத் திருவிழா தொடங்கியது. தமிழக அரசு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை  சார்பில் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா காங்கயம் ரோடு வேலன் ஹோட்டல் வளாகத்தில் துவங்கியது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் புத்தக திருவிழாவை துவக்கி வைத்தனர். இதில் … Read more