அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு: உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

விழுப்புரம்: தமிழக அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் இளைய சகோதரரும் பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி … Read more

தமிழ்நாட்டில் மோடி போட்டி..? தொகுதியை லாக் செய்தது டெல்லி மேலிடம்..!

2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என ஊகங்கள் வலுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான அரசியல் மோதலில் ஈடுபட்டு வரும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. கிராமமெங்கும் கட்சிகள் தொடங்கப்பட்டு கொடி கம்பங்கள் நடப்பட்டுவிட்டன. பாஜக என்றால் ஏதோ வடமாநில கட்சி என்று பேசப்பட்ட நாட்கள் மாறி தமிழ்நாட்டின் ஓர் கட்சி என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் … Read more

Pongal 2023: ஆத்தூர் உடையார்பாளையத்தை மிரட்டிய மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பில் 34 ஆம் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ஆத்தூர் உடையார்பாளையத்திலிருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற. இதில் முதலில் சிறிய குதிரைகளுக்கான போட்டி நடைபெற்றதில் ஆத்தூர் திருச்சி கோவை சேலம் குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் இருந்து வந்த 17 சிறிய குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டன. குதிரை ரேக்ளா போட்டி உடையார் பாளையம் காந்தி சிலையிலிருந்து பத்து … Read more

காணும் பொங்கல், செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அலைமோது பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர்: காணும் பொங்கல், செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இன்று காணும் பொங்கல் ஒருபுறம், செவ்வாய்க்கிழமை மறுபுறம் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவள்ளூர் … Read more

'ஒரே நாடு-ஒரே தேர்தல் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற நினைக்கிறார் மோடி ஜி'- செல்லூர் ராஜூ

“உதயநிதி, முக.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலலிதா சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்… “உதயநிதி, மு.க.அழகிரி சந்திப்பு மூலம் தமிழ்நாட்டில் பாலாறு தேனாறு ஏதேனும் … Read more

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு.. உண்மை கண்டறியும் சோதனை இன்று தொடக்கம்…!!

தமிழகத்தையே உலுக்கிய திமுக அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ஜெயராமன் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு இன்று உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நடை பயிற்சிக்குச் சென்ற பொழுது மர்ம நபர்களால் அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தமிழகம் … Read more

பெரும் சோகம்.. மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி..!

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளை முட்டி ஒருவர் பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா போட்டி மற்றும் சேவல் சண்டை என பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் … Read more

அதிமுகவில் மூக்கை நுழைக்காதீர்கள்: சசிகலாவுக்கு ஜெயக்குமார் பதில்

சென்னை: “அதிமுகவில் மூக்கை நுழைக்காதீர்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருமித்தக் கருத்தோடு இருக்கும்போது, சசிகலா கூறியிருப்பதை தேவையில்லை என்றுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கருதுவான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சசிகலா ஆயிரம் … Read more

மு.க.அழகிரி மகனுக்கு எம்.பி., பதவி: உதயநிதி விஜயம் – பரபரக்கும் மதுரை!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக நேற்றிரவு மதுரை சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தனது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்தார். உதயநிதியை சால்வை போர்த்தி வரவேற்ற அழகிரி, எனது தம்பி மகன் அமைச்சரான பிறகு, பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளார் என்றார். அழகிரி மனைவி காந்தி அழகிரி உதயநிதியை உச்சி முகர்ந்து வரவேற்றார். அதன்பிறகு வீட்டுக்குள் சென்ற உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா குடும்பத்துடன் சுமார் … Read more