குடும்பத்தை கூல் செய்த உதயநிதி: முக்கோண மோதலுக்கு தயாராகும் மதுரை திமுக?

ஒருவேளை அழகிரியின் ரீ என்ட்ரி விரைவில் அமைந்தால் மதுரை திமுக முக்கோண யுத்தத்துக்கு தயாராகிவிடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. பாதையை மாற்றிக் கொண்ட அழகிரி2020 வரை திமுகவுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் அவ்வப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வாடிக்கையாகக் கொண்டிருந்தார் மு.க.அழகிரி. ஆனால் ரஜினிகாந்த அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பின்னர் மு.க.அழகிரி அரசியல் ரீதியாக பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தேர்தல் சமயத்தில் சமாதான தூது!2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் … Read more

பார்வேட்டை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம். அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார். பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக … Read more

ஆளுநருக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கை ஆக்சனுக்கு ஏற்ற ரியாக்சன் – கார்த்திக் சிதம்பரம்

ஆளுநரின் செயலுக்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கை ஆக்ஷனுக்கு ஏற்ற ரியாக்ஷன் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், ஆளுனராக நாகலாந்தில் பல குழப்பங்களை செய்துவிட்டு தண்டனை பணியாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்தான் தமிழக ஆளுநர் ரவி. ஆளுநரின் செயலுக்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கை ஆக்ஷனுக்கு ஏற்ற ரியாக்ஷன் என தெரிவித்தவர் தொடர்ந்து… சேது சமுத்திர திட்டத்தை அதன் இயற்கை தன்மை பாதிக்கப்படாதவாறு கவனமுடன் நிறைவேற்ற வேண்டும். எடப்பாடி … Read more

ஆளுனர் ஆர்.என். ரவியின் தமிழ்நாடு பெயர் மாற்ற கருத்து தேவை இல்லாதது: அண்ணாமலை

ஆளுனர் ஆர்.என். ரவியின் தமிழ்நாடு பெயர் மாற்ற கருத்து தேவை இல்லாதது: அண்ணாமலை Source link

பொங்கல் பண்டிகை.. இன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று (ஜனவரி 17ஆம் தேதி) கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 17ஆம் தேதி) கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

விமான விபத்தின் கடைசி நேர பதற வைக்கும் காட்சிகள்!!

நேபாளம் நாட்டின் பொக்காரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விமானத்தில் உள்ள பதிவுகளை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாலா, பிஷால் சர்மா … Read more

மூதாட்டியிடம் 12 சவரன் நகை பறித்து சென்ற இளைஞர்.. சிசிடிவி உதவியால் கொள்ளையனை பிடித்த போலீசார்!

காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் மூதாட்டியிடம் 12 சவரன் தங்கச் செயினை பறித்து சென்ற இளைஞர் சிசிடிவி உதவியால் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குணசுந்தரி என்ற மூதாட்டி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 12 சவரன் எடையுள்ள இரண்டு தங்க சங்கிலியை பறித்து கொண்டு … Read more

டிஎன்பிஎஸ்சி-யின் 2023-ம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் தேர்வு அறிவிக்காததால் இளம் வழக்கறிஞர்கள் ஏமாற்றம்

சென்னை: சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சியின் இந்தாண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் இடம்பெறாத நிலையில், மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கும் அரசாணையை எதிர்நோக்கி காத்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்கள் கடந்த 2014 முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும் நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு போன்றவற்றை சென்னை … Read more

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

அலங்காநல்லூர்: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more