வருமான வரித் துறை நோட்டீஸை எதிர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

சென்னை: வருமான வரித் துறை வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, அமைச்சர் பொன்முடிக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில், அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த … Read more

ஈரோடு கிழக்கில் நா.த. கட்சி பொருளாளர் படுகொலை; சோகத்தில் உறைந்த சீமான்..!

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன்கள் கௌதம், கார்த்திகேயன் ஆகிய இருவரும் வீட்டிலேயே மசாலா பொடி, தேன், செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் கார்த்திகேயன் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருந்தார். இந்த நிலையில், இவரது உறவினரான மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் நேற்றிரவு கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று அண்ணன், தம்பி இருவரையும் வெளியே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகசாமி … Read more

திண்டிவனம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் வீடூர் அணையிலிருந்து திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு  2022 -2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 01.02.2023 முதல் 15.06.2023 வரை 135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்- பிரேமலதா 33-வது திருமண விழா கொண்டாட்டம்: வீடியோ- போட்டோஸ் வைரல்

விஜயகாந்த்- பிரேமலதா 33-வது திருமண விழா கொண்டாட்டம்: வீடியோ- போட்டோஸ் வைரல் Source link

டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986.32 கோடி வரி பாக்கி… வருமானவரித்துறை நோட்டீஸ்க்கு தடை..!!

தமிழக அரசின் 2021-2022-ம் நிதி ஆண்டில் ரூ. 7,986.32 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும் என டாஸ்மார்க் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.  இந்த நோட்டீசை எதிர்த்து டாஸ்மார்க் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 2016-2017 நிதியாண்டில் மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு நிலுவையில் உள்ளதால் … Read more

விட்டுக்கொடுத்த தமிழக மக்கள்.. 43.96 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் ரூபாய் பரிசை வாங்கிச் சென்ற நிலையில் பலர் அந்த பணத்தை வாங்கவில்லை. எனவே, அந்த பணம் மீண்டும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வட சென்னையில் 35,723 ரேஷன் அட்டைதாரர்களும், தென் சென்னையில் 49,538 ரேஷன் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு … Read more

சென்னை மக்களுக்கு இனி மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்கள்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: “2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான … Read more

'பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கக் கூடாது..!' – அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்!

பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மாணவ – … Read more

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் நடத்தும் பல்நோக்கு பணியாளர், ஹவில்தார் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய அரசில் உள்ள 11,409 (இந்தியா முழுவதும்) பணிக்காலியிடங்களுக்கு பல்நோக்கு பணியாளர் (Multi Tasking Staff) மற்றும் Havidar என்ற பணியிடத்திற்கு ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்வினை தமிழில் எழுதவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி … Read more

மயிலாடுதுறையில் சில இடங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்; விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறையில் சில இடங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்; விவசாயிகள் வேதனை Source link