ஆளுநரின் தேநீர் விருந்து – புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை: ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள இருக்கிறார். இதையடுத்து, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கரோனா … Read more

அம்மா சிமெண்ட் முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினருமான யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அம்மா சிமெண்ட் கிட்டங்கியில் ஆவணங்களின் படி இருக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை விட குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் … Read more

குட்கா, பான் மசாலா பொருட்கள் மீதான தடை உத்தரவு ரத்து

கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு … Read more

திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் கலக்கும் சாய ஆலையின் கழிவுநீர்..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் சாய ஆலையின் கழிவுநீர் கலக்கிறது. சாய ஆலையின் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் குழாயை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிவேக பயணத்துக்காக சிக்கிய கல்லூரி மாணவர்கள், செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம்!

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த வித்யா என்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் … Read more

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க நிலைப்பாட்டை ஆதரிப்போம்: பாரிவேந்தர், ஏ.சி சண்முகம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க நிலைப்பாட்டை ஆதரிப்போம்: பாரிவேந்தர், ஏ.சி சண்முகம் அறிவிப்பு Source link

குடியரசு தின விழா :: 2 நாட்களுக்கு அண்ணா சதுக்கம் செல்ல பொதுமக்களுக்கு தடை..!!

குடியரசு தினத்தையோட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தலைவர்கள் நினைவிடங்களை பார்வையிட இன்று மற்றும் நாளை முற்பகல் வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு … Read more

வைரலாகும் கவிஞர் வைரமுத்து பதிவு..!!

சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர். இந்தநிலையில் அவர்களின் நினைவு போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம். கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான். … Read more

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை

கோவையில் 100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான, தனியார் நிதி நிறுவன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். டிரீம் மேக்கர்ஸ் குளோபஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சதீஷ்குமார், பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, இவரும் இவரது மனைவியும் கடந்த 2019ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கே.கே.புதூரில் உள்ள வீட்டில் வசித்து … Read more

இடைத்தேர்தலில் போட்டியா? – ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி தொடர்பான நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று (ஜன.25) செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ஈரோடு … Read more