பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வழக்கு… தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “பழனி முருகன் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகன் எனப் போற்றப்படும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்துவதே சிறப்பானதாகும் தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில … Read more

தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி… உயர்கல்வியை எளிதாக்கும் 'திராவிடமாடல்' திட்டம்

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவிற்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக விளங்குகின்றன. தொடக்கப் பள்ளி முதல் முனைவர் பட்டத்திற்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சியடைந்துள்ளன.  அரசுபள்ளிகள் அதிகரிப்பு, அரசு பள்ளி மாணவர்கள் நலன் சார்ந்த மதிய உணவு திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச சீருடை, இலவச பஸ்பாஸ், ஆகியவை மாணவர்களை கல்வி கற்றலில் நீடிக்கச் செய்கிறது. மாணவர்கள் கற்றலை எளிமையாக்க தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட சமச்சீர் … Read more

திருவட்டார் அருகே பரபரப்பு; நரசிம்மர் கோயிலில் கொள்ளை: ஏணி வைத்து மேற்கூரையில் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே குதித்தனர்

குலசேகரம்: 108 வைணவ திருத்தலங்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் ஒன்று. இங்கு சுமார் 420 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ம்தேதி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த கோயில் வளாகத்தின்  தென்கிழக்கு மூலையில் நரசிம்மர் கோயில் மற்றும் மடம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் கேரளா மாநிலம் திரிச்சூர் மடத்தினரால் நிர்வகிக்கப்பட்டு  வருகிறது. இந்த கோயிலில் அன்னபூர்னேஷ்வரி, யோக நரசிம்மர், லட்சுமி,  முருகர் … Read more

புதுச்சேரியில் சேவல் சண்டை: கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு; 5 நாளாக சேவலை பராமரிக்கும் போலீசார்

புதுச்சேரியில் சேவல் சண்டை: கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு; 5 நாளாக சேவலை பராமரிக்கும் போலீசார் Source link

தனி நபருக்கு ரூ.50 ஆயிரம் வரை அனுமதி… வேட்பாளர் செலவுக்கு ரூ. 40 லட்சம் … தமிழக தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள அனைவரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு “தேர்தல் நடத்தை … Read more

ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா!!!….

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா இணைந்துள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. .@tamannaahspeaks from the sets of #Jailer @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/sKxGbQcfXL — Sun Pictures (@sunpictures) January 19, 2023 ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் ‘படையப்பா’ … Read more

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் உள்பட இருவர் பலி; 7 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பேபி என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் லீசுக்கு … Read more

எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி… ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!

கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே தற்போது வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 04, 11, … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டி – கே.எஸ்.அழகிரி தகவல்

ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி விலக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, ” இந்திய அரசின் பிரதிநிதியாக … Read more

வெள்ளகோவில் அருகே விஷம் கலந்ததாக புகார்: பொது கிணறு தண்ணீர் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்பு

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே விஷ மருந்தை கலந்ததாக கூறப்படும் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பரிசோதனைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உப்புப்பாளையம் திருமங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (56). விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் திறந்து விடும் பணியையும் செய்து வருகிறார். கடந்த 16ம் தேதியன்று கிணற்றில் மோட்டார் போட சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (59), அவரது மனைவி … Read more