ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும்: அன்புமணி

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினர், தங்களுக்கு பணி நிலைப்பும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. பொருளாதாரப் படிநிலையில் கடைசி இடத்தில் இருக்கும் அவர்களின் … Read more

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? அன்புமணி அட்டாக்!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி: மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடி உள்ளார். 

அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகளுக்கான கட்டிடங்களை கட்டும் திமுக அரசு, அங்கு புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதில்லை. வேலூர் மாநகரில் அமைந்துள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் நாளை திறக்க உள்ளார். ஆனால், … Read more

சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தமிழக அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தமிழகத்துக்கான கல்வி பங்களிப்பு தொகை ரூ.2,152 கோடியை விடுவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தமிழகத்துக்கான கல்வி பங்களிப்புத்தொகை ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் கே.சி.ஹரி கிருஷ்ணன் தலைமையில் டெல்லியில் ஜூன் … Read more

நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் கூறினார். தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், மேற்கு வங்க மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியா பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்கத்தில் அதன் எதிர்வினை இருக்கும். அதேபோல் மேற்கு வங்கத்தில் ஏதாவது நடந்தால் அதன் எதிர்வினை தமிழகத்தில் … Read more

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைந்த நிலையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குள்ளான காலமே இருப்பதால்,. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி (60) கடந்த ஜூன் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். வழக்கமாக ஒரு எம்எல்ஏ மறைந்தால், அது தொடர்பாக இறப்பு சான்று, சட்டப்பேரவை செயலருக்கு கிடைத்த பிறகு, உறுப்பினர் … Read more

மாநகராட்சி, நகராட்சி கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்கால தடை

மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. காரைக்குடியை சேர்ந்த சிவராஜ், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மே 26-ல் மாநகராட்சி ஆணையர் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட்டார். இதேபோல் பிற மாநகராட்சிகளிலும் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் … Read more

இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் மனு : அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதிகோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை … Read more