காமாட்சிபுரி ஆதீனம் கொடுத்த பரிசு… ஓபிஎஸ் செம ஹேப்பி… இனிமே தான் ஆட்டமே இருக்கு!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் உலக சமாதான பெருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு உலக சமாதான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரியில் 51 சக்தி பீடக் கோவில் அமைந்துள்ளது. காமாட்சிபுரி ஆதின பெருவிழா இதன் ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இருக்கிறார். இந்த கோயிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20ஆம் ஆண்டு உலக … Read more

ஜெயலலிதா நினைவு நாள் இன்றுதான்… கொளுத்தி போடும் அதிமுக முக்கிய பிரமுகர்

முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினரோடு சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று (டிச. 4) மரியாதை செலுத்த வருகை தந்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிசாமி,”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்றுதான். எனவே இன்றைக்கு நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறோம். இபிஎஸ் ஓபிஎஸ் ஏற்க வேண்டும்  ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதை அமைக்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே … Read more

பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமாக உரமிடுவதை தவிர்க்க வேண்டும்; விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள்

வலங்கைமான்: பயிர்கள் எளிதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க விவசாயிகள் அளவுக்கு அதிகமான உரங்களை பயிருக்கு விடுவதை தவிர்க்கவேண்டும் என வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளார். நெல் பயிரில் உரம் மேலாண்மை பற்றி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. வலங்கைமான் வட்டாரத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 14635 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் அளவுக்கு அதிகமான … Read more

மதுரை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி –அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

மதுரையில் நள்ளிரவில் ஏடிஎம் மிஷினை உடைத்து திருட முயன்று அலராம் அடித்ததால் தப்பியோடிய இளைஞர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஹெல்மெட் அணிந்தபடி ஏடிஎம்-ல் புகுந்த இளைஞர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து இளைஞர் தப்பியோடியுள்ளார். இதனால் ஏடிஎம் மெஷினில் இருந்த பல … Read more

'அதிமுகவின் கடைசி 4 ஆண்டு கால ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர்' – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” உழைப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டு என்பதற்கு சுந்தரைப் போன்றவர்கள் இந்தக் கழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். பதவி வரும், போகும். கழகம்தான் நம்முடைய அடையாளம். நம்முடைய இயக்கம். நம்முடைய உயிர் மூச்சு. அப்படிப்பட்ட இயக்கத்தை … Read more

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை… இடி, மின்னல், காற்று எச்சரிக்கை..!

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மழை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் … Read more

கிருஷ்ணகிரி வனப்பகுதிகளில் அபாயங்களை தவிர்க்க 300 கி.மீ., தூரத்திற்கு யானை தாண்டா அகழிகள் சீரமைப்பு; விரைவாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காப்புகாடுகளில் 270 யானைகள் முகாமிட்டுள்ளது. இவை கிராமங்களுக்குள் புகுந்து ஏற்படுத்தும் அபாயங்களை தவிர்க்க 300 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை தண்டா அகழிகளை சீரமைக்கும் பணி, துரித கதியில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறை சார்பில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.  தமிழக-கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி, அதிக வனப்பரப்பை கொண்ட பகுதியாகவும் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் மனித-வனஉயிரின மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் ஆண்டு தோறும் உயிர்சேதமும், பயிர்சேதமும் அதிகரிப்பது … Read more

சசிகலா மௌனம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் – டிடிவி தினகரன்

2023-ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதமின் இல்லத் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்… பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது, போடாத ரோடுகளுக்கு கூட பணம் … Read more

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து… இத்தனை சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் பரங்கிமலை ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து… இத்தனை சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் பரங்கிமலை ரயில் நிலையம் Source link

வானிலை முன்னறிவிப்பு | டிச.7, 8 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் … Read more