திருவண்ணாமலையில் பரத நாட்டியம் ஆடியபடி 14 கி.மீ. தூரம் கிரிவலம்: தெலங்கானா நடன கலைஞர்கள் சாதனை முயற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டிய கலைஞர்கள், நேற்று பரத நாட்டியம் ஆடியபடி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கிய அவர்கள், கிரிவலப் பாதை முழுவதும் ஆன்மிக பாடல்களுக்கு தகுந்தபடி நடனமாடிக் கொண்டே சென்றனர். நடன கலைஞர்களுக்கு முன்பாக வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியை நாட்டியப் பள்ளியை சேர்ந்த … Read more

17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கணினி உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்க: முத்தரசன்

சென்னை: தமிழக அரசின் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 17 ஆண்டுகளாக பணியாற்றிவரும் கணினி உதவியாளர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெயிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் 17 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய … Read more

டமால்… டுமில்..! ரணகளமான காங்கிரஸ் அலுவலகம் – கட்டையால் தாக்கி கொண்ட நிர்வாகிகள்!

சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இன்று, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை, எதிர்கோஷ்டியினர் முற்றுகை இட்டனர். இதைத் தொடர்ந்து நெல்லை ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். … Read more

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு

வேலூர்: உயர்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் … Read more

நளினி ஊடகத்தில் நிறைய பொய் சொல்கிறார்… இனியாவது திருந்த வேண்டும் – முன்னாள் ஏ.டி.எஸ்.பி அனுசுயா ஆவேசம்

நளினி ஊடகத்தில் நிறைய பொய் சொல்கிறார்… இனியாவது திருந்த வேண்டும் – முன்னாள் ஏ.டி.எஸ்.பி அனுசுயா ஆவேசம் Source link

கரூர் : கழிவு நீர் தொட்டியை திறந்த தொழிலாளிகள்.! அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம்.!

கரூர் மாவட்டத்தில் உள்ள சுக்காலியூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். அதேபகுதியில், இவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.  இதன் காரணமாக, அதில் போடப்பட்ட குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலைகைகளை பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தனர்.  இதைப்பார்த்து, … Read more

தி.மலை மகா தீப தரிசனத்தைக் காண 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்க முடிவு

திருவண்ணாமலை: மகா தீப தரிசனத்தைக் காண அண்ணாமலை மீது ஏறும் 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற உள்ளன. தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி, பக்தர்களின் வருகை, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து … Read more

ஆளுநரை அடக்க கம்யூனிஸ்ட் எடுக்கும் அடுத்த அஸ்திரம்!

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றன. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது தமிழக ஆளுநர் விவகாரம் குறித்து அவர் கூறும்போது, ” தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், பாஜக நிர்வாகி போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் … Read more

தவணை கட்ட தவறினாலும் நிதி முறைகேடு இல்லாத மகளிர் குழு கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானது: கூட்டுறவுத்துறை உத்தரவு

வேலூர்: தவணை கட்ட தவறினாலும் நிதி முறைகேடு இல்லாத மகளிர் குழு கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 31ம்தேதி வரை நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் நிபந்தனைகளின் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் … Read more