`தமிழகத்தில் 180 % குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு’- நீதிமன்றத்தின் அதிர்ச்சி தகவல்கள்!

குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர். `இப்போதெல்லாம் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என சொல்லமுடியாத அளவுக்கு, எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு CACL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180 % குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். … Read more

விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் … Read more

நவ.27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவ.27-ம் தேதி வரைமிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனைஒட்டிய தென்மேற்கு வங்கக் கட லில் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, நேற்று காலை முதல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. … Read more

கோவையில் 4 நாட்கள், 3 கேள்விகள்… முகமது ஷாரிக் திக் திக் பிளான்… புது ரூல்ஸ் போட்ட போலீஸ்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக் வெடிகுண்டை எடுத்து சென்று நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது. மேலும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஷாரிக் கோவையில் தங்கியிருந்த தகவல் கிடைத்தது. உடனே கர்நாடக தனிப்படை போலீசார் கோவை விரைந்தனர். கோவை … Read more

எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு வீடியோ வெளியிட்ட இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு இலங்கை கடற்படை வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிகுந்த அச்சத்துடன் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகள் இந்திய எல்லையை நோக்கி வந்தன.

பாஜகவின் கருவியாக ஈபிஎஸ் செயல்படுகிறார் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருப்பதாக விமர்சித்தார். அதிமுகவை கைப்பற்ற யுத்தம் நடப்பதாகவும், அது தனக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை என்று கூறிய … Read more

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை மறக்க கூடாது – லால்பகதூர் சாஸ்திரி சிலை திறப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 9 அடி வெண்கல சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது, ‘நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது’ என்றார். சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில், மத்திய பொதுப்பணி துறைசார்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் 2-வது பிரதமருமான லால்பகதூர் சாஸ்திரி சிலைஅமைக்கப்பட்டுள்ளது. 9.5 அடி உயரம், 850 கிலோ … Read more

13 மாவட்டங்களில் இன்று காலையில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தரும்புரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணியின் நிமித்தம் செல்லக்கூடியவர்கள் சிரமங்களுக்கு … Read more