எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு வீடியோ வெளியிட்ட இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு இலங்கை கடற்படை வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிகுந்த அச்சத்துடன் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகள் இந்திய எல்லையை நோக்கி வந்தன.

பாஜகவின் கருவியாக ஈபிஎஸ் செயல்படுகிறார் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருப்பதாக விமர்சித்தார். அதிமுகவை கைப்பற்ற யுத்தம் நடப்பதாகவும், அது தனக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை என்று கூறிய … Read more

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை மறக்க கூடாது – லால்பகதூர் சாஸ்திரி சிலை திறப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 9 அடி வெண்கல சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது, ‘நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது’ என்றார். சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில், மத்திய பொதுப்பணி துறைசார்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் 2-வது பிரதமருமான லால்பகதூர் சாஸ்திரி சிலைஅமைக்கப்பட்டுள்ளது. 9.5 அடி உயரம், 850 கிலோ … Read more

13 மாவட்டங்களில் இன்று காலையில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தரும்புரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணியின் நிமித்தம் செல்லக்கூடியவர்கள் சிரமங்களுக்கு … Read more

திருவண்ணாமலையில் இன்று தீபத்திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள், அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, அன்று காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். வரும் 28ம் தேதி 2ம் நாள் நாள் காலை உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் … Read more

கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு.. இன்று முதல் ரூ.1000 நிவாரணத் தொகை.! 

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை இன்று முதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் மட்டும் சுமார் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள … Read more

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும் ரூ.5க்கு ஸ்பெஷல் டீ! எங்கு தெரியுமா?

இளைஞர் ஒருவர் காதலில் தோற்றவர்களுக்கு மட்டும் 5 ரூபாய்க்கு டீ விற்று கவனம் ஈர்த்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியைச் சேர்ந்த அந்தார் குர்ஜர் என்ற இளைஞர் பி.ஏ இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும், அவரது உறவினர் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் சந்தித்த இருவரும், பின்னர் தொலைபேசி வாயிலாக நண்பர்களாக பழகி பேசிக்கொண்டனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண், இவரிடம் … Read more

ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்சேர்ப்பு

சென்னை: இந்திய ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நவ.27 முதல் 29-ம் தேதி வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு கிடைத்த தமிழ்நாடு,ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இதுதொடர்பாக, கடந்த ஆக. 8-ல்வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள தங்களது சான்றிதழ்களுடன் வந்து பங்கேற்கலாம்.இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இத்தேர்வு வெளிப்படையா கவும், நேர்மையாகவும் நடைபெறும். எனவே, விண்ணப்பதாரர்கள் யாரிடமும் … Read more