போலி ஆவணம் மூலம் மதுரை மண்டலத்தில் ரூ.27 கோடிக்கு ஊழல்! மருத்துவத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு!

மதுரை மண்டலத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல மருந்துகளை கடந்த 2017-2018 ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதி ஆக்கி அரசுக்கு 27 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பரசன், மதுரை மண்டல மருத்துவ நிர்வாக அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கிராமப்புற மருத்துவ சேவை கண்காணிப்பாளர் அசோக் மற்றும் அமர்நாத் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு … Read more

கோவை: காட்டு யானையிடம் உயிர் தப்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் – சி.சி.டி.வி வீடியோ

கோவை: காட்டு யானையிடம் உயிர் தப்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் – சி.சி.டி.வி வீடியோ Source link

பாஜக எம்பி வீடு மீது தாக்குதல்.. 8 பேர் மீது வழக்குப் பதிவு..!

பாஜக எம்பி வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 8 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியின் பாஜக எம்பியாக இருப்பவர் அரவிந்த் தர்மபுரி. இவருடைய வீடு மீது மர்ம கும்பல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியைச் சேர்ந்த குண்டர்கள், சந்திரசேகர ராவ், … Read more

பாதுகாப்பு அறிவிப்புகளின்றி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணிகள்… முன்னும் பின்னும் செல்லும் ரோடு ரோலரால் அச்சத்தில் மக்கள்..!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத் பேட்டையில் போதிய பாதுகாப்பு அறிவிப்புகளின்றி சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். வாகன ஓட்டிகள் சிலர் நெரிசலில் சிக்காமலிருக்க பணிகள் நடைபெறும் சாலையில் புகுந்து வருகின்றனர் . அப்போது ரோடு ரோலர் வாகனம் முன்னும் பின்னும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு பலகைகளை வைத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும். Source link

மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்பகிர்மான இயக்குநர் சிவலிங்கராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரும் நாட்களில் அதிகமழை பெய்தாலும்கூட எவ்வித பாதிப்பும்இன்றி சீரான … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனையில் மீதமுள்ள 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. 12 பேயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை ஆகும். மீதமுள்ள மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. நேற்று 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

ரூ.56 ஆயிரம் பணம் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தி: அதிர்ச்சியடைந்த பெண் – நடந்தது என்ன?

உளுந்தூர்பேட்டை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் நூதன முறையில் கொள்ளையடித்த இளைஞர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, இவர் நேற்று உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார் அப்போது பணம் எடுக்கும் வழிமுறைகள் தெரியாததால் அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் ஏடிஎம் … Read more

குஜராத் தேர்தல் களம்: இன்னும் 11 நாட்கள்.. 40 இடங்களில் 29 பா.ஜ.க தலைவர்கள் பரப்புரை

குஜராத் தேர்தல் களம்: இன்னும் 11 நாட்கள்.. 40 இடங்களில் 29 பா.ஜ.க தலைவர்கள் பரப்புரை Source link

விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு!

கோவை மாவட்டதில் சிந்தாமணி ரேஷன் கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விற்பனையை துவங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் “நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுவரை நடப்பு நிதியாண்டில் 9.51 லட்சம் விவசாயிகளுக்கு 7,166 கோடி ரூபாய் விவசாய கடன் … Read more

அலுவலகங்கள் மூடல்.. ட்விட்டர் நிறுவனத்தில் நடப்பது என்ன?

ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் ஊழியர்கள் வேலை நேரம் போக கூடுதலாக அலுவலகத்தில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே … Read more