அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை – 2 வயது பேரனை மீட்க 5 மாதமாக போராடும் வயதான தம்பதி

அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தங்களது ஒரே வாரிசான 2 வயதுடைய பேரனை அழைத்து வர 5 மாதங்களாக போராடி வரும் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை அடுத்துள்ள இ.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர்கள் குருசாமி – ஈஸ்வரி தம்பதி. இவர்களது மகன் பிரவீன்குமார். அமெரிக்காவில் பணியாற்றி வந்தாகவும், அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரண்டு வயதுடைய மகனுடன் … Read more

ரசிகர்கள் அதிர்ச்சி… டி20 தொடரிலிருந்து விலகிய மற்றொரு வீரர்..!!

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பும்ரா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. Source link

தமிழகத்தில் உள்ள டாடா நிறுவனத்தில் பணி புரிய வடமாநிலத்தில் இருந்து அழைத்துவரப்படும் பணியாளர்கள் – வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில் டாடா நிறுவன பணிக்காக வட மாநிலப் பெண்கள் 850 பேர் வரவழைக்கப்பட்டிருப்பது சட்டப்படி தவறு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக ஜார்க்கண்ட்டிலிருந்து 860 பெண் தொழிலாளர்கள் தனி தொடர் வண்டி மூலம் அழைத்து வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 18 … Read more

தேவர் ஜெயந்தியில் அறிவிப்பு? தெற்கில் பாஜக புது வியூகம்… மோடியின் அடுத்த டார்கெட்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது தென் மாவட்ட அரசியல் களத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். முக்குலத்தோர் வாக்கு வங்கியை வசப்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் நடப்பாண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு போர்த்தப்படும் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து யார் எடுத்து … Read more

மதுரையில் 3 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை: 200 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்..மக்கள் அவதி..!!

மதுரை: மதுரையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாட்டுத்தாவணி குடியிருப்பு பகுதியில் 2வது நாளாக நீர் சூழ்ந்துள்ளது. மதுரையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. சாத்தையாறு, உத்தங்குடி, ஈச்சமடை ஆகிய கால்வாய்களில் இருந்து வெள்ளநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாகவும், ஈச்சமடை கால்வாய் சுவர் தனிநபரால் உடைக்கப்பட்டதால் வெளியேறி வரும் தண்ணீராலும், மாட்டுத்தாவணி எதிரே உள்ள டி.எம்.நகரை 2வது நாளாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாய் … Read more

மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் ஹாயாக உலாவரும் முதலை – அச்சத்தில் பொதுமக்கள்

மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் உலாவரும் முதலையால் ஆற்றுப் பாலத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பழைய மற்றும் புதிய ராஜா வாய்க்கால் பாசன பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காகவும், பாசனத்திற்காகவும் அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இதில், சில முதலைகள் அணையில் இருந்து தப்பித்து அமராவதி ஆற்றுப் பகுதிகளில உலா வருகிறது. இதனால் கல்லாபுரம், மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர, கணியூர் மற்றும் கடத்தூர் ஆகிய ஆற்றுப் பகுதிகளில், அவ்வப்போது பாறைகளின் மேல் படுத்துக் கொள்ளும் முதலையை பார்த்து … Read more

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்கள் புழல் சிறைக்கு மாற்றம்

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்கள் புழல் சிறைக்கு மாற்றம் Source link

மசாஜ் சென்டர் பெயரில்  அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது.!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அன்னை சத்யா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக பள்ளிகரணை விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிருஷ்ண குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அடிப்படை அமைத்த போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடந்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் ஈடுபடுத்திய இடைத்தரகர்களான வினோத் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது … Read more

1,021 உதவி மருத்துவர் பணி.. வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணிக்கு வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி நேற்று வெளியிட்டது. இதன்படி, அரசு மருத்துவமனைகளில் 1,021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில், அனைத்து சமூகப் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 74 இடங்கள், எஸ்.டி … Read more