கடலூரில் ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து படுகொலை.. போலீஸ் விசாரணை..!

கடலூர் அருகே, கழுத்தறுத்து ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவமணியை காணாததால், உறவினர்கள் தேடி வந்தனர். அங்குள்ள வாழைத்தோப்பில் சருகுகளால் மூடப்பட்ட நிலையில், அவர் சடலமாக கிடந்தார். ஆட்டோ பாலத்தின் அருகேயுள்ள குழியில் கவிழ்க்கப்பட்டு கிடந்தது. மோப்ப நாய் உதவியுன் ஆய்வு செய்த போலீசார், 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். Source link

தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த கலப்பு மணம் புரிந்தவருக்கு, அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015-ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற … Read more

சிதம்பரம் பஸ் நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்: வீடியோ வைரலால் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரம் பஸ் நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ நேற்று முன்தினம் முதல் வைரல் ஆகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவி,  பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவிக்கு … Read more

திருவள்ளூர் || கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் வாலிபர் கைது.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த தாமனேரி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமி ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆதிவராதபுரம் காலனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் என்ற வாலிபர் கத்தியை காட்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டுஅதிர்ச்சியடைந்த பெற்றோர், … Read more

8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால்,  சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. Source link

“ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி… கடும் விளைவுகள் நேரிடும்” – தமிழக காங். எச்சரிக்கை

சென்னை: “பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. பிரதமர் மோடி இதில் தலையிட்டு இத்தகைய நடவடிக்கைகளை திரும்பப் பெற தவறினால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கிற … Read more

ஒரு மணி நேரம் பயணிக்க ரூ.600 கட்டணம் குமரி முதல் வட்டக்கோட்டை வரை அதிநவீன சுற்றுலா படகு சேவை: வரும் 1ம்தேதி முதல் தொடக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் படகு சவாரிக்காக எம்எல். தாமிரபரணி, எம்எல், திருவள்ளுவர் படகுகள் வரும் 1ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து உயரதிகாரிகள் இன்று வர உள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளான எம்.எல்.குகன், எம்.எல். பொதிகை, எம்.எல். விவேகானந்தா ஆகியவற்றின் மூலம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். காலை 8 மணி முதல் … Read more

”எங்கள ஒன்னும் பண்ண முடியாது” – மதுக்கடை எதிர்ப்பு போராட்டமும், விற்பவர்களின் மிரட்டலும்!

மொரப்பூர் அருகே மதுபாட்டில் விற்பனை செய்யும் சந்துக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த நவலை கிராமத்தில் 900-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இந்த கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு தவறான செயல்களுக்குள் உள்ளாகி வந்தனர். இந்த கிராமத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து … Read more