Tamil news today live: ஹரியானா குருக்ராம் பகுதியில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 1 பலி, மீட்பு பணிகள் தீவிரம்

Tamil news today live: ஹரியானா குருக்ராம் பகுதியில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 1 பலி, மீட்பு பணிகள் தீவிரம் Source link

ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் அக்.2-ம் தேதி வீடு வீடாக காதி துணி விற்பனை: ஒரே நாளில் ரூ.1 கோடி வருவாய் ஈட்ட கைத்தறி துறை இலக்கு

சென்னை: தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறை, அமெட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னையில் நாளை (அக்.2) மாணவர்கள் மூலம் வீடு வீடாக காதி துணைகளை விற்க திட்டமிட்டுள்ளது. அன்று ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான துணிகளை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து தமிழக காதி மற்றும் கைத்தறித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் தரமான, விலை குறைவான காதி மற்றும் கைத்தறித் துணிகளை கண்கவரும் வடிவமைப்புடன் நெய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். பிற … Read more

அதிமுக பிளவுக்கு இந்த இருவர் தான் காரணமா? வைத்தியை நோக்கி திரும்பும் கேள்விகள்!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சு அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்ஸுக்கு எந்த வகையிலும் மரியாதை குறைவு ஏற்படக் கூடாது என இணை பொதுச்செயலாளர் பதவி அளிக்க உறுதி அளிக்கப்பட்டது. அவரது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தோம். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்தனர். ஓபிஎஸ்ஸிடம் தனியாக எங்களால் பேச முடியவில்லை. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் எப்போதும் உடனிருப்பர். இவர்கள் அனைவரும் அதிமுக … Read more

உளுந்தூர்பேட்டையில் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சுங்கச்சாவடியில் ஊழியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல நேரிட்டது. உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் உள்ள சுங்க சாவடியில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுங்கச்சாவடியில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக முன்னறிப்பு … Read more

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு – தமிழக அரசின் அறிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் சார்பாக குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்.,) 2023 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் சென்னை, அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள். கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 28.05.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ள … Read more

ஓசூர் வனச்சரகத்தில் உரிமம் இல்லாத 111 நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைப்பு: மாவட்ட வன அலுவலர் தகவல்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் உரிமம் இல்லாத 111 நாட்டுத் துப்பாக் கிகளை தாமாக முன்வந்து கிராம மக்கள் ஒப்படைத்துள்ளதாக, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், கடந்த 2-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தாமாக முன் வந்து ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை ஒப்படைப் பவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து … Read more

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டன குபேர் அங்காடியில் மீன்கள் மொத்த விற்பனை செய்ய தடை விதித்ததை ஏதிர்த்து மீனவர்கள் தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டன குபேர் அங்காடியில் மீன்கள் மொத்த விற்பனை செய்ய தடை விதித்ததை ஏதிர்த்து மீனவர்கள் தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர். தடைக்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விற்பனையை நிறுத்தி தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளதால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

முதியவரின் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு போனை திருடும் அசால்ட் திருடன்.. மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட்டில் முதியவரின் சட்டை பாக்கெட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் லாவகமாக செல்போனை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஷ்வர் பாஷா, விடுமுறை நாளான நேற்று கிராஸ் ரோடு மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், காய்கறி வாங்குவது போல் சுற்றித்திரிந்து அவரது பாக்கெட்டில் இருந்து போனை திருடிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், … Read more

தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் 5 குழந்தைகளுடன் தவித்த 2 பெண் அகதிகள்: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்

ராமேசுவரம்: தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 5 குழந்தைகள் உட்பட 7 இலங்கைத் தமிழர்களை தனுஷ்கோடி அருகே உள்ள மணல்தீடையில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று தலைமன்னார் போலீஸிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும்உணவுப் பொருட்களின் விலைஉயர்வு காரணமாக, அந்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் காலை தனுஷ்கோடி அருகே ஏழாம் தீடையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக, அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் போலீஸாருக்கு தகவல்கொடுத்துள்ளனர். … Read more

ஆயுதபூஜை எதிரொலி: குமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500க்கு விற்பனை..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் மிகவும் முக்கியமான  மலர் சந்தை குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். பண்டிகை காலங்களில் அதிக அளவில் பூக்கள் இந்த சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஆயுதபூஜை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி தோவாளை சந்தையில் பூக்கள் விலை … Read more