கடலூர் அருகே சோகம்.! தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழப்பு.!

கடலூர் மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ராகுல் (31). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சொந்த வேலைக்காக காரணமாக மேலரதவீதிக்கு சென்றுள்ளார்.  அப்போது அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல்.. பந்தாடப்படுகிறார் பண்ருட்டியார்..!

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும், இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அதிமுகவின் … Read more

சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் ஏன்? – திருமாவளவன் விளக்கம் 

சென்னை: “3 கட்சிகள் மட்டுமே பங்கேற்கின்ற ஒரு போராட்டமாக இதனை கருதக் வேண்டாம். சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை. சங்பரிவார்களின் வன்முறைகளுக்கு இங்கே இடம்தரமாட்டோம், அவர்களின் சதிகளை, சதி திட்டங்களை முறியடிப்போம் என்று விரும்புகின்ற அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒரு அறப்போர்தான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை … Read more

ஓபிஎஸ் கையில் பிரம்மாஸ்திரம்; எடப்பாடிக்கு இன்பத்திலும் துன்பம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக , இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக கட்சியை வழிநடத்தி வந்தனர். இந்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை பற்றி பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி அணியாக செயல்பட தொடங்கினர். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்மொழிய செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு … Read more

காந்தி ஜெயந்தியை கொண்டாட ஆர்எஸ்எஸுக்கு உரிமை உண்டு – ஆளுநர் தமிழிசை

சி.பா.ஆதித்தனாரின்  118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதித்தனார் சாமானியன் தொழில் செய்வதற்காக புத்தகம் எழுதியவர் நத்தை வேகத்தில் மட்டுமல்ல தந்தி வேகத்திலும் செய்தியை அளிக்க முடியும் என்று செய்து காட்டியவர் என்றார். மேலும் பேசிய அவர், “ எந்த மாநிலமாக இருந்தாலும் அதில் பெட்ரோல் குண்டுகள் வீசும் வன்முறை சம்பவம் நடைபெறக்கூடாது. … Read more

விபத்துகளை தவிர்க்க சிறு பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்

*பொதுமக்கள், வாகனஓட்டிகள் வலியுறுத்தல் சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் நடந்து வரும் சிறு பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் சாத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் சிறுபாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரண்டு இடங்களில் பால பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன … Read more

தஞ்சை: அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய வடமாநில நபர் – போலீசார் விசாரணை

அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பியோடிய இளைஞரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஊரணிபுரம், வெட்டிக்காடு வழியாக கந்தர்வகோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை, காட்டாத்தி என்ற இடத்தில் திடீரென ஒருவர் கல்வீசி தாக்கியுள்ளார். இதில், பேருந்தின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறியது. திடீரென நடந்த இந்த தாக்குதலால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதையடுத்து கல்வீசிய … Read more

ஐயா என்ன காப்பாத்துங்க.. சரணடைந்த டிடிஎஃப் வாசன்.. ஜாமீனில் விடுவித்த கோர்ட்..!

போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கைதுக்கு பயந்து மதுக்கரை நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் சரணடைந்தார். மாலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருசக்கர வானத்தில் அதிவேகமாக செல்வதை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவேற்றி வருபவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன். சமீபத்தில் இவர், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் போலீசார் இவரை எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னாள் யூடியூபர் ஜி.பி.முத்துவை அழைத்துக் கொண்டு பைக்கில் … Read more

“காந்தியும் அம்பேத்கரும்தான் இந்தியாவின் அடையாளம். இது பாஜகவுக்கு ஏன் தெரியவில்லை?” – சீமான்

சென்னை: “காந்தி பொதுவானவர் என்றால் 3 ஆயிரம் கோடியில் எதற்காக வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தீர்கள்? இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்கரும்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “காந்தி பொதுவானவர், அவரது பிறந்தநாளில் ஆர்எஸ்எஸ் … Read more

தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை … Read more