பக்தி கோஷங்கள் விண்ணதிர குலசை முத்தாரம்மன் கோயிலில் மகிஷாசூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

உடன்குடி: லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. மைசூருக்கு அடுத்த படியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி 25ம் தேதி காளி பூஜை, சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது. 26ம் தேதி அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, சிறப்பு அபிஷேகம், … Read more

சின்னசேலம் அருகே மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு மிரட்டல்

சின்னசேலம் அருகே சுடுகாடு செல்லும் வழியில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சி விற்பனையாளர்களை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்தி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியின் அனுமதியோடு, சுடுகாடு செல்லும் வழியில் , கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சிலர், மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை எங்களுக்கு செலுத்தினால் தொடர்ந்து கடை நடத்தலாம். மீறி விற்பனை செய்தால், உங்கள் கடைகள் … Read more

நித்யானந்தாவின் கைலாசா விருதுகள்: திருச்சி சூர்யாவிற்கு விருது அறிவிப்பு!

திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா. அதற்கு நன்றி கூறும் விதமாக தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார் சூர்யா சிவா. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு தான் அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட … Read more

சிக்கல் சிங்கார வேலனை தரிசித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன்

சென்னை: சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவருக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான காசி விஸ்வநாதன் சண்முகம் தற்போது சாமி தரிசனம் செய்வதற்கு தமிழகம் வருகை தந்துள்ளார். குறிப்பாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி  விஸ்வநாதன் சண்முகம் ஒரு முருக பக்தர் ஆவார். ஆண்டுக்கு இரு முறை தமிழகம் … Read more

சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைப்பு: திருப்பூர் காவல் ஆணையர் தகவல்

திருப்பூர்: சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். நேற்று காலை இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு உட்கொண்டனர். உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்பே தெரியும் எனவும் கூறினார்.

சிதம்பரம் கோயிலில் 1955 முதல் 2005 வரை சரிபார்க்கப்பட்ட நகைகளை மீண்டும் ஆய்வு செய்ய சொல்வது உள்நோக்கம் கொண்டது: தீட்சிதர்களின் வழக்கறிஞர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1955-ம் ஆண்டு முதல் 2005 வரை, சரிபார்க்கப்பட்ட நகைகளை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவது உள் நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர் களின் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் சிதம்பரத்தில் உள்ள அவரதுஅலுவலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று கூறியது: சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், 9 கட்டங்களாக நகைகளை சரி பார்த்து ஆய்வு செய் தனர். … Read more

மாரத்தான் ஓட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா போன்ற பெருந்தொற்றுகளுக்கும், இயான் புயல் போன்ற பேரிடர்களுக்கும் அடிப்படைக் காரணம் காலநிலை மாற்றமும், அதன் விளைவான புவி வெப்பமயமாதலும் தான். இந்த ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

விஜய தசமி விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அம்பு போடும் நிகழ்ச்சி கோலாகலம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்க நாச்சியார் நவராத்திரி விழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி கடந்த 4ம் தேதி வரை 9 நாட்கள் நடந்தது. இந்நிலையில் விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி  உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு சிங்க பெருமாள் கோயில் ஆஸ்தான மண்டபத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஆஸ்தானமிருந்தபடி மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். … Read more

இன்று முதல் ரேஷன் கடைகளில் சிலிண்டர்கள் கிடைக்கும்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

இன்று முதல் ரேஷன் கடைகளில் சிலிண்டர்கள் கிடைக்கும்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு Source link

திண்டுக்கல் || 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி.! போக்சோவில் கைது.!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் செடிப்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கன் என்பவரது மகன் கூலித்தொழிலாளி ஆண்டிச்சாமி(26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிககும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த பழக்கம் இவர்களிடையே காதலாக மாறியதால், இருவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். இதையடுத்து ஆண்டிச்சாமி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடம் உல்லாசமாக … Read more