ஆவினில் பால் பாக்கெட்டை திருடும் ஊழியர்: வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட்

திண்டுக்கல் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட்டுகளை ஊழியர்கள் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமார் 30,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், பால் பதப்படுத்தப்படும் நிலையத்தில் வேலை … Read more

தென்மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்.. இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தாம்பரம் – நாகர்கோவில் அதி விரைவு சிறப்பு ரயில் (06001) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். … Read more

புதுச்சேரி | திமுக எம்பி ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம்: 3 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு

புதுச்சேரி: திமுக எம்பி ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. இரு அரசு பேருந்துகள், ஒரு கல்லூரி பேருந்து ஆகியவற்றின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததால் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பேருந்து சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. திமுக எம்பி ராசாவின் பேச்சை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முழு … Read more

ஓசி என்றால் என்ன? இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது?

அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நகரப் … Read more

அதிமுக எம்பியின் உறவினர் மீது கொலைவெறித் தாக்குதல்! போலீசார் தீவிர விசாரணை

ராமநாதபுரம்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினரின் உறவினர் வாளால் தாக்கப்பட்ட சம்பவம், முதுகுளத்தூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கோகுலகண்ணன். இவர், அதிமுக நியமன எம்பியும் ஓபிஎஸ் சின் தீவிர விசுவாசியுமான தர்மரின் சகோதரியின் மகன் ஆவார். சொந்த ஊரான புளியங்குடியில் தர்மர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று அந்த வீட்டின் அருகே ஒரு கார் அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த எம்.பி தர்மர் … Read more

ஆம்பூர் அருகே தனியார் காலனி தொழிற்சாலையில் தீ விபத்து… பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் காலனி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலனி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து தொழிற்சாலையை … Read more

மாநகர பேருந்து மீது மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் விழுந்து விபத்து – 5 பேர் காயம்

மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன், மாநகர பேருந்து மேல் விழுந்த விபத்தில் 5 பேருந்து ஊழியர்கள் காயமடைந்தனர். சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை குன்றத்தூர் பகுதியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்ற மாநகர பேருந்து மீது, மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. ராட்சத தூண் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகளை கிரேன் மூலம் தூக்கியபோது எதிர்பாராதவிதமாக பேருந்து மீது கிரேன் கவிழ்ந்தது. இதில், … Read more

கருணாநிதி வெளியிட்ட அரசாணை என்ன ஆச்சு? உண்ணாவிரதம் அறிவித்த அரசு மருத்துவர்கள்

கருணாநிதி வெளியிட்ட அரசாணை என்ன ஆச்சு? உண்ணாவிரதம் அறிவித்த அரசு மருத்துவர்கள் Source link

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..!

தமிழகத்தில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டு விடுமுறை, 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி பயிற்சி அக்டோபர் … Read more

பாஜகவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: உரிய நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தல்

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசுவது யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்தார். நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எந்த … Read more