காஞ்சிபுரம் அருகே அகழ்வாய்வில் தங்கம் கண்டெடுப்பு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்படுத்தியதாக தகவல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் அகழ்வாய்வில் போது தங்கம் கிடைத்திருப்பது தொல்லியல் துறையினரிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜூலை 3-ம் தேதி தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு பணியை தொடங்கினர். தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணியில் வரலாற்று காலத் தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் ஒன்றரை கிராம் அளவில் தங்கத்தால் ஆனா … Read more

கோத்தகிரி: குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் – அச்சத்தில் பொதுமக்கள்

கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு கரடிகள் நீண்ட நேரம் உலா வந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை தேயிலை தோட்டத்தில் … Read more

ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு..!

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க, தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை மாநில அரசு உயர்த்தி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 … Read more

'எய்ம்ஸ் ஆரம்பகட்டப் பணிகள் 95% முடிந்தது என்றுதான் ஜெ.பி.நட்டா பேசினார்' – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சென்னை: மதுரை எய்ம்ஸ் ஆரம்பகட்டப் பணிகள் 95% முடிந்தது என்றுதான் ஜெ.பி.நட்டா பேசியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ” மதுரை எய்ம்ஸ் ஆரம்பகட்டப் பணிகள் 95% முடிந்தது என்று தான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். … Read more

தூண்டில் போட்ட ஓ.பன்னீர்செல்வம் – வசமாக சிக்கும் எடப்பாடி அன்கோ!

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர, புது திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி … Read more

பள்ளிகளுக்காக நிதி ஒதுக்குவாரா முதலமைச்சர்? ஆர் பி உதயகுமார் கேள்வி

வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதமடைந்த 5,583 பள்ளி கட்டிங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதலமைச்சர் ஒதுக்குவாரா என  எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘வடகிழக்கு பெருமழை குறித்து நாளை மறுதினம் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. பருவமழை குறித்து மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும். அதேபோல் கால்நடை, வேளாண் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாக்க … Read more

கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமனம்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

கோவை: கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

'பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன மசோதாவில் சட்ட சிக்கல் உள்ளது' – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ஆர்என்.ரவி தெரிவித்துள்ளார். கல்வி பொது பட்டியலில் உள்ளதால், அரசியல் சாசன ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. பல்கலைக்கழக மானிய குழு, சட்டப்படி துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. மாநில அரசுடன் நான் நல்ல நட்புறவுடன் இருக்கிறேன். முதலமைச்சர் சிறப்பான முறையில் … Read more

15 நாட்கள் இதெல்லாம் செய்யக்கூடாது.. திருச்சி கமிஷனர் அதிரடி உத்தரவு..!

திருச்சியில், இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது. இதுகுறித்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாநகரில் இன்று (செப்.24-ம் தேதி) முதல், வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது. பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41-ன் கீழ் இந்த தடை உத்தரவு … Read more

தமிழகத்தில் பரவும் காய்ச்சல்கள்; கள நிலவரத்திற்கேற்ப தடுப்பு நடவடிக்கை தேவை:  ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பரவிவரும் கரோனா, டெங்கு, ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த கள நிலவரத்திற்கேற்ப தகுந்த தடுப்பு நடவடிக்கை தேவை என்று அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாகப் பரவிவரும் ‘ஃப்ளூ’ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க அரசை வலியுறுத்தி நான் … Read more