மதுரை அதிமுக பொதுக்கூட்டம் | சிரிப்பு உரை எனச் சொன்ன ஆர்.பி.உதயகுமார் – கோபித்துக் கொண்ட செல்லூர் ராஜூ

மதுரை: ‘‘திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது’’ என்று அதிமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘கொங்கு மண்டலத்தில் பறந்த கே.பழனிசாமி கொடி, தற்போது தென்மண்டலத்தில் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையாக இபிஎஸ் உள்ளார். மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிற திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதற்கு கே.பழனிசாமி தலைமையில் அணி திரள்வோம்’’ … Read more

தமிழ்நாடு வட இந்தியா போல் மாறக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

விருத்தாச்சலத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, விருதாச்சலம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விருதாச்சலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், தமிழ்நாட்டில் அதிக அளவில் கரும்பை அரவை செய்த, அம்பிகா சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மூடி கடப்பதாகவும், உடனடியாக விவசாயிகளுக்காக … Read more

அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் நடக்கின்றனர்; மனித கழிவை மனிதனே அகற்றினால் கலெக்டர், ஆணையர்கள் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மதுரை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது, இந்நிலை தொடர்ந்தால் கலெக்டர், மாநகராட்சி ஆணையர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மனிதக் கழிவுகளை அகற்றுவது, பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வது, கழிவுநீரை அகற்றுதல், குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் மேற்கொள்ளும் நிலை உள்ளது. மனிதக் கழிவுகளை … Read more

சென்னை: சாலை ஓரத்தில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழப்பு.!

சென்னை கேகே நகரில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன், எம்ஜிஆர் நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்துவரும் ஜானகிராமனுக்கு கல்யாண் என்ற மகனும், கண்மணி என்ற மகளும் இருக்கின்றனர். கல்யாண் தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கண்மணி சென்னை … Read more

புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கம் | போராட்டம் செய்வது நல்லதல்ல – ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் செய்வது நல்லதல்ல என்றும் போராடக்கூடாது என்றும் ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய, துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று கலை மற்றும் பண்பாட்டுத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குனர் கந்தன் பங்கேற்றார். அப்போது, நூலகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் மற்றும் வில்லியனூரில் உள்ள … Read more

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை ஏன்? அண்ணாமலை கேள்வி!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு … Read more

இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது: ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்:  புரட்டாசி மாதம் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 150க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன. இரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துள்ளதாக கூறி விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதிக்கு மீனவர்கள் வந்து விடாதபடி, இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வேறு … Read more

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு ஏன்?-ராகுல் காந்தி விமர்சனம்

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு அதிக அளவில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நாட்டிலுள்ள இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் காந்தி இன்று கூடலூரில் மேற்கொண்டார். கோழிப்பாலம் பகுதியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைப் பயணமாக வந்து கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று … Read more

ஜெயலலிதாவும் இதே போல தடை செய்த வரலாறு… ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ்

ஜெயலலிதாவும் இதே போல தடை செய்த வரலாறு… ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ் Source link

“அணிவகுப்பு, மனித சங்கிலி… அரசு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது” – மார்க்சிஸ்ட்

சென்னை: மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார். மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில், தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. … Read more