“அரசின் மீதான கோபத்தால் குற்றச்சாட்டு” – தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: அரசின் மீது உள்ள கோபத்தால் மருந்து தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டை ஒரு சிலர் கூறி வருகின்றனர் என்றும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் கடந்த சில … Read more

இந்து மத பெயரில் சலுகை பெறும்போது தெரியவில்லையா? ஆ.ராசாவை கலாய்த்த அர்ஜூன் சம்பத்!

மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க புத்தகத்தை வெளியீட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த்த அர்ஜூன் சம்பத் பேசியதாவது: “மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து புத்தகமாக தமிழக மக்கள் அறியும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் மின் இணைப்பு கட்டணம் உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் … Read more

மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது – கமலை வறுத்தெடுக்கும் வானதி

கோவை சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமரின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களுடைய வேண்டுகோளின் படி அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு அங்கன்வாடி சார்பாக நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் … Read more

முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி ஹீலியம் வாயுவை சுவாசித்து சென்னை ஐ.டி. பெண் தற்கொலை

கோபி: கோபி அருகே பாட்டியை பார்க்க வந்த சென்னை ஐ.டி.நிறுவன பெண், ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி-மரகதமணி தம்பதியரின் மகள் இந்து (25). பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. இவருக்கும் கோபி அருகே உள்ள நலகண்டன்பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணு பாரதி (30) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி … Read more

சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது: இது தொடர்ந்தால் ஆட்சி அகற்றப்படும் – கே.பி.ராமலிங்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது இதேநிலை தொடர்ந்தால் மிக விரைவில் ஆட்சி அகற்றப்பட வாய்ப்புள்ளது. என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது… தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. … Read more

பெரியார் பிறந்தநாள்: அதிமுக சார்பில் இபிஎஸ் மரியாதை 

சென்னை: பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மின் கட்டண உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. … Read more

ஆ.ராசாவை பேச விட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரா? – டிடிவி தினகரன் அட்டாக்!

ஆ.ராசாவை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாரா? என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். ஆ.ராசாவின் கருத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்து வருகிறது. அத்துடன் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் … Read more

இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன்

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார்  சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மாலை அணிவிக்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், ‘சமூக நீதியின் வழியே ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலை நாட்ட அனைத்து  ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் … Read more

காவல்காரன்பட்டி வடசேரி வழியாக நெடுஞ்சாலைக்கு செல்லும் ஒருவழி சாலை அகலப்படுத்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தோகைமலை: தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டி வடசேரி வழியாக திருச்சி- திண்டுக்கல் நான்கு வழி சாலை வரை செல்லும் ஒரு வழி சாலையை இருவழி சாலையாக விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி கரூர் மாவட்டத்தின் தென் கிழக்கு எல்லையில் கடைசி பகுதியாக உள்ளது. காவல்காரன்பட்டியில் இருந்து வடசேரி, தென்நகர் வழியாக திருச்சி மாவட்ட எல்லையான திருச்சி- திண்டுக்கல் 4 … Read more

முதியவரை திசை திருப்பி ரூ.2 லட்சம் கொள்ளை: கொள்ளையர்களை தேடும் போலீசார்!

வங்கியில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை வானவில் நகர் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், union வங்கியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு காத்திருந்த திருடர்கள் 100 ரூபாய் நொட்டை சாலையில் போட்டு இது உங்களுடைய பணமா என்று அவரின் கவனத்தை திசை திருப்பி … Read more