பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதியை தடை செய்க: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: “தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: “தீப்பெட்டி உற்பத்தி தொழில் தமிழகத்தின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஒரு பாரம்பரியத் தொழிலாகவும் உள்ளது. இத்தொழிலில் … Read more

திமுக செக்; பீதியில் உறைந்த எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. கட்சியின் தலைமை பதவி யாருக்கு? என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரிடையே கடும் போட்டி நிலவுவதால் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கீழமை நீதிம்ன்றத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக என மாறுபட்ட தீர்ப்பு வெளியானதில் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் அதிமுக விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும் … Read more

சமூக வலைத்தளங்களில் வைரல்; ஒரே அறையில் இருந்த இரட்டை கழிப்பிடம் மாற்றம்

கோவை: சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ஒரே அறையில் இருந்த இரட்டை கழிப்பிடம் மூடப்பட்டு, சிறுநீர் கழிக்கும் வகையில் மாற்றப்பட்டது. கோவை மாநகராட்சி 66வது வார்டு அம்மன்குளம் பகுதியில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இதில் உள்ள ஒரு அறையில் 2 கழிப்பிடங்கள் அருகருகே இருந்தன. நடுவில் எந்த தடுப்பும் இல்லாமல் இருந்தது. இந்த கழிப்பிட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகின. பலரும் மீம்ஸ் வாயிலாக கலாய்த்திருந்தனர். இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ஷர்மிளா … Read more

அரங்கிற்கு வெளியே திமுக கவுன்சிலர்களை சந்தித்த ஸ்டாலின்; தமுக்கம் விழா அரங்கினுள் அனுமதிக்காததால் அதிருப்தி

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தமுக்கம் பல்நோக்கு மாநாட்டு மையம் திறப்பு விழா அரங்கில் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியடைந்தனர். பின்னர் விழா அரங்கிற்கு வெளியே நின்றிருந்த கவுன்சிலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்தார்.. மதுரை தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடியில் பல்நோக்கு மாநாட்டு மையம் அரங்கு திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடந்தது. இந்த அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள், மேயர், … Read more

“எனக்கு களைப்பாக உள்ளது, ஒத்துழைப்பு அளித்ததற்கு மிக்க நன்றி..! – இன்றைய யாத்திரை பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி..!

காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரையிலான ஒற்றுமை இந்திய பயணத்தை நேற்று குமரி காந்தி மன்றம் முன்பாக தொடங்கிய ராகுல் காந்தி இன்று மாலை நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு செய்தார்!! தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை குமரி முதல் காஷ்மீரில் வரையில் சுமார் 3571 கிலோமீட்டர் 150 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்!! நேற்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து … Read more

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் கூடாது: பிரச்னை ஏற்பட்டால் நிறுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் கூடாது என்றும், பிரச்னை ஏற்பட்டால் நிறுத்தலாம் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடல், பாடல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி சத்திகுமார் சுகுமாரா குருப், ‘‘கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளில் பாலுணர்வை … Read more

கோவை | பொதுக் கழிப்பிட வளாகத்தின் ஒரே அறையில் 2 கழிவிடங்கள்: மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கோவை: அம்மன் குளத்தில் உள்ள பொதுக் கழிப்பிட வளாகத்தில், ஒரே அறையில் 2 கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 66-வது வார்டுக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் ஓரிடத்தில் மாநகராட்சியின் சார்பில் கடந்த 1995-ம் ஆண்டு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடத்தின் ஒரு அறையில் மட்டும் 2 கழிப்பிடங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த அறைக்கு கதவுகளும் இல்லை. ஒரே … Read more

ஆட்சி அமைத்ததும் நிலைமை மாறும்..! – சமூக செயற்பாட்டாளர்களிடம் நம்பிக்கை அளித்த ராகுல் காந்தி..!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று 2-வது நாள் நடைபயணத்தை நிறைவு செய்தபோது, அங்கிருந்த சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரையிலான ஒற்றுமை இந்திய பயணத்தை நேற்று குமரி காந்தி மன்றம் முன்பாக தொடங்கிய ராகுல் காந்தி இன்று மாலை நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு செய்தார்! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை குமரி முதல் காஷ்மீரில் … Read more

சிதம்பரம் அருகே குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை வடக்குதெரு, மேட்டுதெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இரண்டு குளங்கள் உள்ளது. இதில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து குளத்தை முழுவதுமாக மூடி உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் குளத்தில் … Read more

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடலில் கலக்கும் நீரை சேமிக்க புதிய முயற்சி.!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடலில் கலக்கும் நீரை சேமிக்க புதிய முயற்சியை சென்னை குடி நீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையார் வழியாக வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் விதமாக சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குடிநீரை தேக்கி வைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 400 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த … Read more