தருமபுரி | மழையால் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு; பாட்டி படுகாயம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (30). இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை ஒன்றரை வயதான குழந்தை நித்தின், பாட்டி ராஜம்மாளுடன் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். திடீரென வீட்டுக்குள் அலறல் சத்தம் கேட்டு நந்தினி சென்று பார்த்துள்ளார். அப்போது, தொடர் மழையால் நனைந்திருந்த வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்து சிறுவன் நித்தின் … Read more

அர்ஜூன் சம்பத் திண்டுக்கல்லில் கைது

திண்டுக்கல்: கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நடைபயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சென்ற இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நேற்று நடைபயணம் துவக்கினார். இந்நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சி நிறுவனரான அர்ஜூன் சம்பத் கூறியிருந்தார். இதற்காக, நேற்று முன்தினம் இரவு ரயிலில் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அர்ஜூன் சம்பத் … Read more

ஓசூரில் தரைப்பாலத்தை கடந்து சென்றவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு

ஓசூரில் கடந்த சில நாட்களாக இரவு வேளையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகேப்பள்ளி ஏரி, பேடரப்பள்ளி ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு ஓசூர் பகுதியில் இடைவிடாது பெய்த 66.40 மி.மீ. கனமழையால் பேகேப்பள்ளி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரியின் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தரைப்பாலத்தை நல்லூர் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பா (55) என்பவர் … Read more

பாலியல் வழக்குகளில் கைதாகும் டீன்ஏஜ் வயதினருக்கு கவுன்சலிங்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பாலியல் வழக்கில் கைதாகும் டீன் ஏஜ் வயதினருக்கு கவுன்சலிங் வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கந்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் லட்சுமணன், ராஜபாளையம் போலீசாரால் போக்சோ வழக்கில் கைதானார். தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் உள்ளார். இதை ரத்து செய்து, விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் … Read more

ஜாக்டோ – ஜியோ சார்பில் சென்னையில் செப். 10-ல் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு: ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் வரும் 10-ம் தேதி நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில்சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்த அமைப்பின் நிர்வாகிகள், மாநாட்டு அழைப்பிதழை வழங்கினர். பின்னர், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வின்சென்ட்பால்ராஜ், கு.வெங்கடேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வாழ்வாதாரநம்பிக்கை மாநாட்டில், முதல்வர்மு.க.ஸ்டாலின் … Read more

பெரியாறு அணையில் இருந்து 2வது சுரங்கப்பாதை அமைத்து தண்ணீர் கொண்டு வர வழக்கு: பொதுப்பணித் துறை முதன்மை செயலர் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: பெரியாறு அணையில் இருந்து 2ம் சுரங்கப்பாதை அமைத்து தண்ணீர் கொண்டு வரக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தரராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியாறு அணை நீரால் ஐந்து மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. அணை பலமிழந்ததாக கூறி நீர் தேக்கும் அளவு 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனால், தென்மாவட்ட தேவை … Read more

சூதாட்டத்துக்கு துணைபோகிறது திமுக அரசு: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம்

திருப்பூர்: ஆன்லைன் சூதாட்டத்துக்கு துணைபோகும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். பல்லடம் பேருந்து நிலையத்தில் பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: திமுக சார்பில் அளிக்கப்பட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. வாக்களித்த மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு, வந்த … Read more

டிரக்கிங் சென்றபோது ஏற்பட்ட பழக்கம்: தென்கொரியா பெண்ணை காதலித்து கரம் பிடித்த தமிழக இளைஞர்

வாணியம்பாடி: வேலை செய்யும் இடத்தில் டிரக்கிங் சென்றபோது தென்கொரியா இளம்பெண்ணை காதலித்த தமிழக வாலிபர், வாணியம்பாடியில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்தவர் பிரவீன்குமார்(33). இவர் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து, மேற்படிப்புக்காக தென் கொரியா சென்றார். அங்கு டாக்டர் பட்டம் பெற்ற பிரவீன்குமார், தற்போது அங்கேயே ஒரு தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பிரவீன்குமாருக்கு மலை ஏறுவது … Read more

‘நீங்கள் ஏன் திமுகவில் இணையக் கூடாது’- மீண்டும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் ஓபிஆர்!

அதிமுகவின் ஒரே மக்களவை எம்பியான ஓ. ரவீந்திர நாத், திங்கள்கிழமை (செப்.5) திமுக அரசு அறிவித்த புதுமைப் பெண் கல்வி நிதித் திட்டத்தை பாராட்டி பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.இந்தப் பாராட்டு முன்னாள் முதலமைச்சரும், ஓ.பி.ஆர்.ரின் தந்தை ஓ.பி.எஸ்.,ஸின் முன்னாள் சகாவுமான எடப்பாடி கே பழனிசாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை நீதிமன்றம் மீட்டுக் கொடுத்த நிலையில் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் … Read more

டெண்டர் முறைகேடு வழக்கு குறித்த விசாரணை ஒத்திவைப்பு.! 

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., சார்பில்,  அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை விசாரித்த போலீசார், குற்றச்சாட்டுக்கு காரணம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது.  ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு … Read more