திறக்கப்படாமல் உள்ள புதிய மண்பாண்ட கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் புதிதாக கட்டப்பட்ட மண்பாண்ட கூடம் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை சாலையூரில் 15 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் பரம்பரையாக மண்பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பானை, அடுப்பு, வடைசட்டி, தண்ணீர்பானை, களையம், குழம்பு சட்டி உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இங்குள்ள தொழிலாளர்கள் அவரவர் வீட்டின் வெளியே திறந்த வெளியிலேயே மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இதனால் மழை காலங்களில் … Read more

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படை.. நடுக்கடலில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்து அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி நாள்தோறும் அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன. அதில் 5 இந்தியாவுக்கும், 7 இலங்கைக்கு சொந்தமானது. இதில் ஒரு மணல் தீடை இரண்டு நாட்டிற்கும் பொதுவானதாக இருந்து … Read more

பாம்புக் கடியில் இருந்து பலரைக் காப்பாற்றியவர் பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்..!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருதிவெனு குடிடிப்பா கிராமத்தில் வசித்து வருபவர் கொண்டூரி நாகபாபு சர்மா (48). பூசாரியான இவர் ஐதராபாத்தில் வசித்து வந்தார். இவரது தந்தை பாம்பு பிடிப்பவர் என்பதால், இவருக்கும் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்ததுள்ளது. இந்த நிலையில், நாகபாபு சர்மா தசராவை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான கிருதிவெனு குடிடிப்பாவுக்கு வந்ததுள்ளார். அப்போது பீத்தலவா என்ற பகுதியில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதால், கிராம மக்கள் நாகபாபு சர்மாவை அழைத்துச் சென்றனர். சம்பவ … Read more

பண்ருட்டி | பழுதடைந்த கட்டிட வகுப்பறையின் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

அங்குச்செட்டிப்பாளையம்: அங்குச்செட்டிப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிட வகுப்பறையின் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்களை, மழைக் காலத்தில் எங்கு அமரவைப்பது என புரியாமல் பள்ளித் தலைமையாசிரியர் தவித்து வருகிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குச்செட்டிப்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 600 மாணவ, மாணவியர் பயிலுகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைக் கட்டிடங்களில் ஓடு வேயப்பட்ட நான்கு வகுப்பறைக் கட்டிடங்கள் பழுதாகிவிட்டதால், அவற்றை இடித்துவிட்டு புதிய வகுப்பறைக் கட்டித் தருமாறு பள்ளி … Read more

புதிய ப்ளானுடன் இறங்கும் பாஜக; இந்த 8 தொகுதியில் தாமரை தான்!

வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்பதற்கு பாஜக சார்பில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்தும் பாஜக ஆலோசித்து வருகிறது. இதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்கள் … Read more

தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

சின்னாளபட்டி: ஆத்தூரில் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும்  வழியில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால்   வாகனங்களை ஓட்டிச்  செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல்  மாவட்டம், ஆத்தூரிலிருந்து காமராஜர் நீர்தேக்கத்திற்கு செல்லும் வழியில்,  சொக்குப்பிள்ளை ஓடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி  மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த ஓடை வழியாகச் செல்லும். இந்த  தரைப்பாலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது தரைப்பாலம்  சேதமடைந்து காணப்படுகிறது. தடுப்புச்சுவரும் இல்லை. தற்போது மழை காலம்  என்பதால், பாலத்தின் கீழ் உள்ள … Read more

அரியலூர்: 4ம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியை மீது புகார்

அரியலூரில் நான்காம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் அடித்த ஆசிரியையை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 162 மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். அதேபோல் 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 4 ஆம் வகுப்பு மாணவர் நிவாஸை ஆசிரியை இளவரசி துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடவடிக்கை முதன்மை … Read more

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம்: எம்.பி அதிருப்தி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் போதிய அளவு முன்னேற்றம் ஏற்படாததால் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதமசிகாமணி அதிருப்தி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் கவுதமசிகாமணி தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் பேசிய கவுதமசிகாமணி, “மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் மந்தமாகவே நடைபெறுகிறது. குறிப்பாக தடுப்பணை, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள் போன்றவை கடந்த 3 ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பல … Read more

திருமாவுடன் கைகோர்க்கும் சீமான்… அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பம்!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு உயர் … Read more

திமுகவின் சரிவின் தொடக்கம் இது, இதிலிருந்து மீள முடியாது: பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்

திமுகவின் சரிவு தொடங்கிவிட்டது என்றும், அக்கட்சி இதிலிருந்து மீள முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ஆ ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று  தமிழக முதல்வர் நினைத்தால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம். இந்த சரிவில் இருந்து அவர்கள் ஒரு போதும் மீள முடியாது’ என தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் … Read more