ஜெர்மனி பெண்ணை கரம் பிடித்த மதுரை இளைஞர்..!

சிவகங்கையில், காரைக்குடியை சேர்ந்த இளைஞரும்- பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணும் இரு தினங்களுக்கு முன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், அதேபோன்று, ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணை, மதுரை இளைஞர் தமிழ் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்துக்கொண்டார். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காசிலிங்கம் – சூரியகலா தம்பதியின் மகன் காளிதாஸ், ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இண்டர்நெட் வாயிலாக பழக்கம் ஏற்பட்ட ஜெர்மனியை சேர்ந்த ஹாணா பொம்க்லெவா என்ற … Read more

தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3 மாதங்கள் பொருள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டை தகுதி நீக்கமா?

மதுரை: தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத 13,11,716 குடும்ப அட்டைகள் குறித்து விசாரிக்க உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் ஆதார் எண் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட்டு மொபைல் போன் எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனால், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ளோரில் யாரேனும் ஒருவர் வராமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. அரசின் இந்த … Read more

மேற்கில் கொடி நாட்ட ஸ்டாலினுக்கு வாய்ப்பு: ஓசூருக்கு வரும் MNC கம்பெனிகள்?

பன்னாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அது வித்திடும் என்பதால், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களை விட முதல்வர் ஸ்டாலின் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். இதற்காக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்து பல கோடி ரூபாய் முதலீடுகளை அவர் ஈர்த்து வருகிறார். நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கேற்ற சூழலும் தமிழகத்தில் உருவாக்கித் தரப்படுகின்றன. தொழில் தொடங்குவதற்கான சூழல் ஒற்றைச்சாளர முறையில் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் … Read more

தினமும் 10 லட்சம் புகார்கள் வருகிறது இணையதளங்களில் பதிவிடும் தவறான பதிவுகளை நீக்க 36 மணி நேரம் ஆகும்: கூகுள் தென்மண்டல அதிகாரி தகவல்

சேலம்: இணையதளங்களில் பதிவிடும் தவறான தகவல்களை நீக்க 36 மணி நேரம் ஆகும் எனவும், இவ்வாறு தினமும் 10 லட்சம் புகார்கள் வருவதாக கூகுளின் தென்மண்டல அதிகாரி தெரிவித்தார். கூகுளின் தென்மண்டல நோடல் அதிகாரி மஞ்சுநாத், சேலம் மாநகரம், மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் உதவி கமிஷனர்கள் உள்பட 53 போலீசார் கலந்து கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு சந்தேகங்களை போலீசார் கேட்டனர். மோசமான … Read more

ஹரப்பா நாகரிக புதிர்கள் விடுவிக்கப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

சென்னை: ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ‘தி இந்து’ குழும அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் … Read more

வாயால் சிக்கிய சி.வி.சண்முகம்; அதிமுகவில் உச்சகட்ட..பரபரப்பு!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி அணியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையே தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை … Read more

செல்போன்களை திருப்பி தரக்கோரி திருச்சி சிறப்பு முகாமில் 13 கைதிகள் தற்கொலை முயற்சி

திருச்சி:  திருச்சி மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறப்பு முகாமில் 108 ஈழத்தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம், தீக்குளிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் (3 டன்) கடத்திய வழக்கு சம்பந்தமாக, திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. … Read more

மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்த உதவி காவல் ஆய்வாளர் கைது.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளரை கைது செய்தனர். சென்னை , ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியராஜ். இவர் மாநகர காவல்துறையினர் விஐபிகளுக்கு பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கணவனை பிரிந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் வந்துள்ளார்.  அந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி 13 வயது அப்போது அந்த சிறுமிக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். … Read more

வேளாண்மைத் துறை சார்பில் ரூ.125 கோடியில் புதிய கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: வேளாண்மைத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.125.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மைத் துறை சார்பில் காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், ஓசூர், ஊத்தங்கரை, அகஸ்தீஸ்வரம், ஆலங்காயம், உச்சிப்புளி, முதுகுளத்தூர், கொங்கணாபுரம், குத்தாலம், நாகமங்கலத்தில் ரூ.22.80 கோடியில், 11 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களும், ரூ.3 கோடியில் கடலூரில் மண், ஆய்வுக்கூடம், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம், … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் யார்? லிஸ்ட்டை ஃபைனல் செய்த ஸ்டாலின்!

உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பதவிகளை பிடிப்பதில் பல்வேறு காய் நகர்த்தல்களை உடன்பிறப்புகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் பதவிகளை பிடிக்க பலரும் தங்களுக்கு தெரிந்த வகைகளில் லாபி செய்து வருகிறார்கள். திமுக, அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமைச்சருக்கு ஈடாக அப்பதவிகள் பார்க்கப்படும். மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருப்பவர்கள் பல வழிகளில் கல்லா கட்ட முடியும் என்பதால், இந்த பதவியை பிடிக்க … Read more