மோசடி, போலி பத்திரப்பதிவு ரத்து.. தமிழகத்தில் புதிய நடைமுறை..!

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலருக்கு வழங்கும் நடைமுறையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து … Read more

சென்னையில் வடிகால் பணியால் ஓர் இடத்தில் 20 நிமிடங்களில் வெளியேறிய மழைநீர்

சென்னை: சென்னையில் இன்று கனமழை பெய்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகளின் பலனால் ஓர் இடத்தில் 20 நிமிடங்களில் தண்ணீர் வடிந்ததுள்ளது தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், … Read more

கோட்டை விட்ட எடப்பாடி; செம குஷியில் ஓபிஎஸ் டீம்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இடையே கடும் போட்டியும், அதையொட்டி மோதல் போக்கும் நிலவி வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரை கட்சியில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் டென்ஷன் ஆன ஓ.பன்னீர்செல்வம் ஒரே நேரத்தில் பாஜக மேலிடம், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என 3 கதவுகளை தட்டி தனக்கு … Read more

உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் கலக்கும் நகராட்சி கழிவுநீர்

சுவாமியார்மடம்: பேரூராட்சிகளின் வடிகால்களில் கலக்கும் வீட்டு கழிவுநீரால்  நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன. இதை தடுக்கும் பொருட்டு, குமரி மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் வீடுகளில் இருந்து வடிகால்களில் கழிவுநீரை விடும் குழாய்கள் சிமெண்ட் கலவைகளால் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலர்  பிரதாபன்  நடவடிக்கை மேற்கொண்டு, வீடுகளில் இருந்து கழிவுநீர் வடிகால்களில் கலப்பது தடுக்கப்பட்டது. ஆனால் உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு அருகே உள்ள குழித்துறை நகராட்சியில் இருந்து கழிவுநீர் சர்வ சாதாரணமாக இங்கு பாய்ந்து வருகிறது. இதை … Read more

சுருக்குமடி வலை விவகாரம் – ஆய்வு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக பிரமுகர்.!

ஆய்வுக்குச் சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனரை திமுக பிரமுகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ள சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் உவரி மீனவ கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலை மூலம் மீன் பிடித்ததாகத் தெரிகிறது. சுருக்குமடி வலை பயன்படுத்த கடந்த 2000 ஆண்டு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மீனவ மக்கள் ஒரு சிலர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் … Read more

ரேஷன்கார்டு தாரர்களுக்கு குட் நியூஸ்.. மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு..!

ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த … Read more

பிஎஃப்ஐ தடை எதிரொலி: 3,500+ காவலர்கள், 28 சோதனைச் சாவடிகள் – கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோவை: பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, கோவையில் காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான 7 காவல் நிலைய எல்லைகளில் மட்டும் 6 காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு துணையாக இருந்த 8 அமைப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இன்று (செப்.28) தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து கோவையில் இன்று காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. … Read more

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு … Read more

எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீய சக்தி பழனிசாமி என்று அழைக்கப்படுவார்: புகழேந்தி ஆவேசம்

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினரை கடுமையாக சாடினார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஜாதி சார்ந்த பேச்சுகளில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நிர்வாகி, ‘கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களே, இந்த எடப்பாடி பழனிசாமியை யாரும் வரவேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 … Read more

சிறுத்தை தாக்கியதில் வனப்பாதுகாவலர் காயம்

தேனி: தேனி வனச்சரகத்தில் சோலார் மின்வேலியில் சிக்கியிருந்த சிறுத்தையை மீட்கச் சென்ற உதவி வனப்பாதுகாவலர், சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தார். தேனி வனச்சரகம், வரட்டாறு பீட்டில் கைலாசநாதர் கோயில் மலைக்கு பின்புறம் மலைக்காப்பு காடு உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பு பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் வனப்பாதுகாவலர்கள் அதனை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விடுவது வழக்கம். இப்பகுதியில் வனவிலங்குகள் விவசாய தோட்டப்பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறை மூலமாக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த மின்வேலியில் சிறுத்தை ஒன்று அகப்பட்டிருப்பதாக வனத்துறைக்கு … Read more